அடுக்கு மாடி உணவகத்தில் அறுசுவை உணவுகளை! அளவின்றி செலவு செய்து! ஆடம்பரமாய் சாப்பிட்டாலும் நம் கல்லூரி நாட்களில் நட்புடன் பகிர்ந்து கொண்ட! தயிர் சாதத்திற்க்கு எதுவும்! ஈடாகாது நண்பனே!
~நம்பிக்கை பாண்டியன்
Saturday, August 26, 2006
எறும்பின் பாடம்
இது கதையுமல்ல கவிதையுமல்ல, ஒரு நிகழ்வு!!
ஒருநாள் மாலை நேரத்திலே! இளையராஜாவின் இசையினிலே! இதயம் வருடும் பாடல்களை! சுவற்றில் சாய்ந்து கண்கள் மூடி! இதமாய் ரசித்து அமர்ந்திருந்தேன்!
கழுத்தில் ஏதோ சுருக்கென்றது! திரும்பிப் பார்த்தால்! எறும்பின் வரிசை! நாளைய தேவைக்கு! இன்றே இரை தேடி! சீரான வரிசையில் சிறப்புடனே! சுறு சுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது! எறும்பிடம் பாடம் கற்கலாமென்று்! பள்ளிப் பாடத்திலும்! அறிஞர்கள் பலரின் கருத்திலும் கவிதையிலும் அறிந்திருக்கிறேன்! எத்தனை உயர்ந்த சுறு சுறுப்பு! எதிர்கால தேவைக்கு சேமிப்பு! இனிப்பில் மண் கலந்திருந்தாலும் , இனிப்பை மட்டும் பிரித்தெடுக்கும்! இஷ்டப்படி இயங்காமல்! சீராய் செல்லும் அதன் பாதையிலே! இப்படி நிறைய நன்மைகளை முன்பே அதனிடம் கற்றிருந்தாலும்! புதிதாய் கற்க்கும் ஆர்வத்தில்! தடையற்ற அதன் பாதையிலே! தடைகள் போல என் விரல் வைத்தேன்! பிரச்சனையற்ற அதன் பயணத்திலே! பிரச்சனையாக இப்போது என விரல்கள்! வரிசைப்பயணம் தடை பட்டதால்! வழி தெரியாத எறும்பெல்லாம் தாறு மாறாய்ச் சிதறியது!
அவற்றில் சில எறும்புகளோ! என் விரலைக் கண்டு மிரண்டு பயந்து! தொடர்ந்து முன்னேறிச் செல்லாமல்! வந்த வழியே திரும்பியது! இன்னும் சிற்சில எறும்புகளோ! என் விரலை விட்டு விலகிச் சென்று சுற்றி வளைந்து மறுபுறம் சென்று! மீண்டும் பயணத்தை தொடங்கியது! இன்னும் சிற்சில எறும்புகளோ! என் விரலின் தடைய எளிதென எண்ணி! ஒருபுறம் ஏறி மறுபுறம் இறங்கி இனிதாய் பயணத்தை தொடங்கியது! இன்னும் சிற்சில எறும்புகளோ! என் விரலை தடையென கருதாமல்! தைரியமாய் ஏறி நருக்கென்று கடித்ததும் ! வலி தாங்காமல் விருட்டென்று விரல்களை இழுத்துக் கொண்டேன்!
இவ்வளவு சிறிய எறும்புகளுக்குள்! இத்தனை பல குணங்களா!! அழகாய் அறிவு உணர்த்தியது! நம்மிலும் இது போல் பலர் உண்டு! வாழ்வின் நல்ல முயற்சிகளை பிரச்சனைகளுக்கு பயந்து தொடராமல்! திரும்பி விடுபவர்கள்! பிரச்சனைகளை விட்டு விலகிச் சென்று அமைதியாய் இருந்து உயர்பவர்கள்! பிரச்சனைகளை எளிதென நினைத்து! சமாளித்து சாதிப்பவர்கள்! பிரச்சனைகளுக்கே பிரச்சனைகளை கொடுத்து! எதிர்த்து நின்று வெற்றி பெறுபவர்கள்! அற்புதமான பாடம் தந்த எறும்புகளுக்கு நன்றி சொல்லி! இமைகள் மூடி இசையில் கலந்தேன்!
~நம்பிக்கை பாண்டியன
ஸ்ரீ அன்னையின் அருள் மொழிகள்
1)உன் விருப்பம் நேர்மையானதாக இருக்குமானால், உன்னை சுற்றி இருக்கும் எல்லாமே ! அதை நீ அடைய உதவி செய்யும்.
2)நீ நினைத்த போதெல்லாம் உனக்கு அருள் புரிய தெய்வம் ஒன்றும் உனக்கு கடமைப்படிருக்கவில்லை! அவன் அருளைப் பெற தகுதியானவனாக உன்னை மாற்றிக் கொள்!
3) நீ செய்யும் ஓவ்வொரு தீய செய்யலுக்கும் ஒரு தீய பலன் நிச்சயம் உண்டு! நீ செய்யும் ஓவ்வொரு நல்ல செய்யலுக்கும் ஒரு நல்ல பலன் நிச்சயம் உண்டு!
4)ஒரு பூவைப் போல, வெளிப்படையாக, எளிமையாக, தெளிவாக, இனிமையாக, மென்மையாக, பாரபட்சமின்றி உயர்ந்த பண்புடன் இருங்கள்!
6)தன்னம்பிக்கை எனும் சூரியன் இருள் சூழ்ந்த இதயத்திற்கு வரட்டும், எல்லாமே எளிதாகிவிடும்.
7)உன் உள்ளத்தில் ஏற்படும் எண்ணம் எதுவாக இருந்தாலும்! உன் வாழ்வின் உண்மைகளையும் நன்மைகளையும் சிதைத்துவிடாதபடி இருக்கட்டும்!
8)உலகம் துயரங்கள் நிறைந்ததுதான், ஆனால் நம்மால் அதை உருமாற்றம் செய்ய முடியும்!
9)கோபமும் பயமும் உங்கள் நோயை நீட்டிக்கும்! அமைதியும் சாந்தமும் உங்களை குணபடுத்தும்!
10)அற்புதமான பேச்சைவிட! ஒரு துளி அன்பினால் அதிகமாக சாதிக்க முடியும்!
11)தீமைகள் ஏன் வருகின்றன, எப்படி வருகின்றன என்று ஆராய்ச்சி செய்வதில் பயன் இல்லை. அவைகள் எங்கும் இருக்கின்றன! அவைகளை அசட்டை செய்! நல்ல விசயங்களில் மனதினை செலுத்து எல்லாம் நலமாகும்!
12)அறிவது நல்லது! வாழ்வது நல்லது! அறிந்து வாழ்வது! அதினிலும் நல்லது!
13)பிரச்சனைகளை புரிந்துகொண்டாலே அதில் பாதி தீர்ந்துவிடுகிறது! அதைப் புரிந்துக் கொள்ள முதலில் உன் மனம் அமைதியாக இருக்க வேண்டும்!
14)இதுவரை நீ எப்படி இருந்தாய் என்பதைவிட இனி நீ எப்படி இருக்க விரும்புகிறாய் ! என்பதை மட்டும் நினைத்து செயல்படு கண்டிப்பாக முன்னேற்றம் அடைவாய்!
Friday, August 25, 2006
"எண்ணங்கள் அழகானால் எல்லாமே அழகாகும் "!உலகத்தில் என் எண்ணங்களை