Wednesday, October 03, 2007

அற்புத கடிகாரம்!
அவசிய வேலைகளால்
அதிகாலை எழுவதற்கு
அலாரம் வைத்த‌
அன்றைய உறக்கத்தில்!
அலட்சியம் செய்த‌
அத்தனை முறையும்!
அக்கறையாய் ஒலித்து
அன்புடன் எழுப்பியது!
அம்மா எனும்,
அற்புத கடிகாரம்!

~நம்பிக்கைபாண்டியன்


Tuesday, October 02, 2007

மறைந்த காதல்!சரியா? தவறா?
எப்படி கேட்பது?
என்ன நினைப்பார்கள்?
என்ற தயக்கத்தில்
எனக்குள் தோன்றி
எனக்குள்ளேய
‌மறைந்து போன‌
சில கேள்விகளைப் போல்!
உன்மேல்
நான் கொண்ட‌
காதலும் ஆனதடி(டா)!
nambikaipandian@gmail.com ~நம்பிக்கைபாண்டியன்