எண்ணங்கள் அழகானால்...
காலம் ஒருநாள் மாறும்! நம் கவலைகள் யாவும் தீரும்!
Monday, November 12, 2018
செல்போன் - கவிதைகள்
1)
எட்டாத
தூரத்திலிருப்பவர்களுடன்
பேசுவதை எளிதாக்கிவிட்டு...
அருகிலிருப்பவர்களுடன்
பேசுவதை அரிதாக்கிவிட்ட
விசித்திர நவீனம்
செல்போன்கள்!
2)
திருவிழா தேரில்
ஊர்வலம் வரும் கடவுளை
முதலில்
வணங்குகின்றன
செல்போன்கள்!
நம்பிக்கைபாண்டியன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)