Monday, November 12, 2018

செல்போன் - கவிதைகள்

1)

எட்டாத
தூரத்திலிருப்பவர்களுடன்
பேசுவதை எளிதாக்கிவிட்டு...
அருகிலிருப்பவர்களுடன்
பேசுவதை அரிதாக்கிவிட்ட
விசித்திர நவீனம்
செல்போன்கள்!


2)

திருவிழா தேரில்
ஊர்வலம் வரும் கடவுளை
முதலில்
வணங்குகின்றன‌
செல்போன்கள்!

                                                        நம்பிக்கைபாண்டியன்