சர்க்கரை வியாதி
அன்று
குழந்தையில்
குழந்தையில்
இனிப்பு
அதிகம் சாப்பிடாதே! என
அம்மா
அன்புடன் சொன்னபோது
கேட்காத மனம்!
இன்று
முதுமையில்
இனிப்பை
தொட்டுகூட பார்ககாதிங்க! என
மருத்துவர் மிரட்டி
சொல்லும்போது கேட்கிறது!
*******************************
அன்பளிப்பாக கிடைத்த
கடித்து சிதைக்கப்பட்டிருந்தது
என் வீட்டு எலிகளால்!
கொலைவெறி கோபத்தில்
வீடெங்கும் தேடியதில்
கிடைத்ததென்னவோ
புதிதாய் பிறந்த
சில கண்திறவா குட்டிகள்தான்!
வீதியில் எடுத்தெறிந்ததும்
தூக்கிச்சென்றன சில காகங்கள்
எலிகளின் எண்ணிக்கையை
குறைத்துவிட்டதாக எண்ணி
கோபம் தணிந்தேன்!
அடுத்த சில நாட்களில்
கடித்து குதறப்பட்டிருந்தன
அம்மாவின்
விலை உயர்ந்த
பட்டுப்புடவைகள்!
*******************************