Showing posts with label ஜல்லிகட்டு. Show all posts
Showing posts with label ஜல்லிகட்டு. Show all posts

Wednesday, January 18, 2017

ஜல்லிகட்டு ‍ (குட்டிகதை)

                                                                                 மகன் ஜல்லிக்கட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதால் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்திருப்பதை அறியாத‌ அப்பா " நேரத்தில வீட்டுக்கு வராம ஏண்டா இப்படி மாடு மாதிரி ஊர சுத்திட்டு வர்ற" என்றார்.


அதைகேட்ட மகன் " என்னப்பா சொன்னீங்க? மாடு மாதிரியா" என்று கேட்டு கர்வமாக சிரித்துக்கொண்டே , தன் சட்டை காலரை தூக்கி விட்டான்,


அதற்கு அப்பா "ஏண்டா உன்ன மாடுனு திட்டுறேன் இப்படி சிரிக்கிறியேடா" என்றார்

 மகன் சிரித்துக்கொண்டே " அப்பா மாடுனா சும்மா இல்லப்பா,
சாதி, மதங்களை கடந்து, ஊரை மறந்து, அத்தனை இளைஞர்களையும், ஒற்றுமையாக ஒன்று சேர்க்கும் வேலையை,

 நம்ம நாட்டில் ஒரு அரசியல்வாதியோ, ஒரு சினிமா நடிகரோ, ஒரு பெரும் பண‌க்காரனோ செய்ய முடியாததை இன்று ஒரு மாடு செய்திருக்கிறது அப்பா,
என்னை மாடு என்று திட்டுவதில் எனக்கு பெருமைதான் அப்பா" என்றான்

 அப்பா புன்னகையுடன் அமைதியானார்.