Sunday, December 30, 2007

நட்புக்காக!

(சிறுகதை மாதிரி ஆனால் சிறுகதை அல்ல)!

""நாளைக்கு ராத்திரி எல்லோரும் குற்றாலம் போறோம்டா! இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் குற்றாலத்தில்தான் நம் ஆட்டம்!" "ஜான் அண்ணன் சுமோ கார்லதான் போறோம் நம்ம பசங்க எல்லொரும் வராங்க! ரெடியா வந்திரு மச்சான்! என்று கணேஷிடம் சொன்னான் செல்வா! ...ம்ம் சரிடா! மாசக்கடைசியாச்சுல கையில் 500 ரூபாய்தான்டா இருக்கு" என்றான்! இருக்குறத கொண்டுவாடா! நான் பார்த்துக்குறேன் என்றான்" செல்வா!

கணேஷ் வீட்டிற்கு சென்றதும் எதிர் வீட்டில் குடியிருக்கும் தன் காதலி விமலா செல்பேசியில் அழைத்தாள்! "கணேஷ் என் கூட வேலைபாக்குற அடுத்த‌ தெரு பொண்னோட அக்காவுக்கு பக்கத்து ஊர் சிவன் கோவிலில் கல்யாணம் அம்மா என்ன போக சொல்லீட்ட்டாங்க ! மறக்காம வந்திடு கணேஷ்!" என்றாள் விமலா. "கண்டிப்பா வரேன்" என்று சொல்லி விட்டு, நண்பர்களிடம் எப்படி சொல்வது என யோசித்தான்!

கணேசும் விமலாவும் சிலவருடங்களாக காதலிக்கிறார்கள்!இருவர் வீட்டிலும் தெரிந்து எதிர்த்தபின், ஒரே தெருவில் இருந்தாலும் நேரில் சந்தித்துகொள்வதில்லை! இருவரும் வேலை பார்க்கும் அலுவலகங்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமே இல்லாமல், நீண்ட தொலைவில் இருக்கின்றன! எனவே அதிகம் சந்தித்துக்கொள்வதில்லை!

யாரேனும் எங்காவது இருவரையும் சேர்ந்து பார்த்ததாக் சொல்லிவிட்டால் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக முடியாது என்பதால், ஞாயிற்றுக்க்கிழமைகளில் கூட வீட்டை விட்டு எங்கும் செல்லாத சூழ்நிலையில் இருப்பவள் விமலா!ஆனாலும் பேசும் விதத்தில் பேசினால் அப்பா சம்மதிக்கும் குணம் உடையவர் என்பதால் நம்பிக்கையோடு காதலித்தால்! தொலைபேசி பேச்சு மட்டும் தினமும் நடக்கும்! இது போல அரிதாக கிடைக்கும் சந்தர்ப்பர்களில்தான் சந்தித்துக்கொள்வார்கள்!

செல்வாவுக்கு போன் செய்து" சாரிடா மச்சான் விமல பக்கத்து ஊர் சிவன் கோவிலுக்கு கல்யாணத்துக்கு போறாளாம் வர சொல்லுறா!நான் போகலாம்னு நினைக்கிறேன்! நீங்க மட்டும் குற்றாலம் போய்ட்டு வாங்கடா! நான் அடுத்த முறை வரேன்!"'என்றான் கணேஷ்.

செல்வாவிற்கு கோபம் உச்சந்தலைக்கு ஏறியது! "ஏண்டா மச்சான் இப்படி இருக்க! நீ வரலைனா நம்ம பசங்க பாதி பேரு வரமாட்டானுங்கடா எவ்வளவு கஷ்டப்பட்டு எல்லோரையும் ஒன்னுசேர்த்திருக்கென் தெரியுமா! லவ்வுலாம் இன்னைக்கு இருக்கும்! நளைக்கு விட்டுட்டு போனாலும் போய்டும்டா, நம்ம ஃப்ரண்ட்ஷிப் அப்படியாடா"என்றான் செல்வா!
கணேஷ்" சாரிடா மச்சான் என்ன புரிஞ்சுக்க!" என்றதும்,கோபத்தில் செல்வா இணைப்பை துண்டித்தான்!

கணேஷ் வரவில்லை என்றதும் சில நண்பர்கள் வரவில்லை என்றார்கள் அவர்கள் வரவில்லை என்றால் நாமும் போகவேண்டாம் என்றார்கள் மற்ற நண்பர்கள், கடைசியில் குற்றாலம் செல்லும் திட்டமே கைவிடப்பட்டது!
கணேஷ் திருமணத்திற்கு சென்று விமலாவுடன் சில மணிநேரங்கள் நிறைய‌ பேசிவிட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்ததால் மகிழ்ச்சியுடன் திரும்பினான்!

இடையில் செல்வாவின் எண்ணிற்கு போன் செய்துபார்த்தான், அவன் இன்னும் கோபம் குறையாமல் இருந்ததால் எடுக்கவில்லை! மறுநாள் எதிரே பார்த்தபோதும் கண்டும் காணாததுபோல் போய்விட்டான்!முன்று நாட்களாகியும் பேசவில்லை!SMS அனுப்பியும் எதற்கும் பதில் அனுப்பவில்லை,என்ன செய்வது என்று யோசித்த கணேஷ் அலுவகத்தில் உணவு இடைவேளையின் போது தன் இ_மெயில் முகவரியில் இருந்து செல்வாவின் இ_மெயில் முகவரிக்கு மெயில் ஒன்றை அனுப்பினான்!


""ஹாய்டா மச்சான்!
எப்பிடியிருக்க? ஏண்டா மூணு நாளா பேச‌மாட்டிங்குற!
அவ்ளோ பெரிய ஆளாகிட்டியாடா நீ! நான் வேணும்னே அப்படி செய்யலடா என் சூழ்நிலை அப்படி! உனக்கே தெரியும் நானும் விமலாவும் நேர்ல பேசி ரொம்ப நாள் ஆச்சுனு!அதான் போய்ட்டேன்!நீ கோபிக்கிற அள‌வுக்கு நான் தப்பு எதுவும் பண்ணின மாதிரி எனக்கு தோன‌லடா! உன் கோபத்த மாத்திட்டு எப்ப‌வும் போல பேசுடா!
ஃப்ரண்ர்ஷிப்பவிட காதல் பெரிசுனு நான் நினைக்கலடா! ரெண்டுமே வேற வேற மாதிரி அதுகேத்தமாதிரிதான் நான் நடந்துகிட்டேன், எப்படினு கேக்குறியா?

நீ எனக்கு ரொம்ப வருசமா பெஸ்ட் ஃப்ரண்டு! ஆனா விமலா எனக்கு மூணு வருசமாதான் லவ்வர்! எப்பவும் இதே மதிரி இருக்க முடியாது, அடுத்த வருசமே கல்யாணம் முடிஞ்சா வாழ்க்கை அன்பு ஆசை சண்டைனு எல்லாம் கலந்து நிறையவே மாறிடும்!இப்போ மாதிரி அப்போ இருக்கமுடியாது!ஆனா நம்ம ஃபிரண்ட்ஷிப் அப்படியாடா? எப்பவும் இதே மாதிரி பெஸ்ட் ஃப்ரண்ட்ஸாதானடா இருப்போம்! லவ்வ புரிஞ்சுகிட்டு ஃப்ரண்ஷிப்பா நீ நம்ம சந்தோசத்த விட்டுகொடுப்ப! ஃபிரண்டிஷிப்ப புரிஞ்சுகிட்டு தன்னோட சந்தோசத்த அவ விட்டுகொடுக்கமாட்டா! ஏன் எந்த லவ்வரும் தன்னோட சந்தோசத்த விட்டுக்கொடுக்குறதில்லை!லவ்வு பிடிவாதம் பிடிக்கும்டா!ஃபிரண்ட்ஷிப்தாண்டா ம‌ச்சான் அணுச‌ரிச்சு போகும்! அதுதாண்டா மச்சான் நம்ம ஃபிரண்ட்ஷிப்போட ஸ்பெசலே!

லவ் விசயத்துல எதாவது ப்ரோகிராம்னா வாய்ப்பு கிடைக்கிறப்போவே யூஸ் பண்ணிக்கிட்டாதான்!இல்லாட்டி அவ்ளவுதான்!ஆனா ஃப்ரண்ஷிப் ப்ரோகிராம எப்ப வேணும்னாலும் எப்படி வேணும்னாலும் மாத்திக்கலாம் மச்சான்!
எதாவ‌து பிர‌ச்ச‌னைனா நீங்க‌ள்லாம் உத‌வி ப‌ண்ண‌ இருப்பீங்க‌ன்ற‌ தைரிய‌த்துல‌தாண்டா நான் தைரிய‌மா காத‌லிக்கிறேன் நீயே இப்ப‌டி இருந்தா எப்ப‌டிடா? வேலை முடிஞ்ச‌தும் ஏழு ம‌ணிக்கு சிவா க‌டைக்கு வ‌ந்திருடா! நான் அங்கேயே இருக்கேன் ! ம‌ற‌ந்துடாதே!!

உன் ந‌ண்ப‌ன்
க‌ணேச‌ன்


அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளில் செல்வா செல்பேசியில் க‌ணேசை அழைத்தான்!
"டேய் மச்சான் இந்த‌ ஞாயிற்றுக்கிழ‌மை கண்டிப்பா குற்றால‌ம் போறோம்டா! எல்லார் கையில‌யும் ச‌ம்ப‌ள‌க்காசு இருக்கும் நல்லா செல‌வு செய்ய‌லாம்!" என எதுவும் ந‌ட‌க்காத‌துபோல் எப்போதும் போல‌ இய‌ல்பாக‌ பேசிக்கொண்டிருந்தான் செல்வா! மெயில் ப‌டித்ததும் ச‌மாதான‌மாகிவிட்டான் என்ப‌து கணேசுக்கு புரிந்தது!
"ச‌ம‌தான‌மான‌ அடுத்த‌ நிமிட‌மே, சண்டைகளை மறந்துவிடுவதே நட்புக்கு அழகு!" என்ப‌தை உண‌ர்ந்த‌வ‌ர்க‌ளாக இருவரும் பேசிகொண்டிருந்தார்க‌ள்!

~நம்பிக்கைபாண்டியன்~

No comments: