Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Wednesday, November 02, 2011

எதிர்வினை - சிறுகதை (வம்சி சிறுகதை போட்டிக்கு)


   எதிர்வினை - சிறுகதை                              
                             ராஜேஷ் அவனது அறை நண்பர்களிடம் "இன்று இரவு என் பார்ட்டி, எல்லா செலவும் என்னுடையது" என்றவுடன் என்ன காரணம் என்று அனைவரும் கேட்டனர். "கடந்த ஒரு மாதாமாக போனிலேயே பேசிக் பஸ்டாப்பிலேயே சந்தித்த அந்த பெண்ணை நாளை நேரில் சந்திக்கப்போகிறேன். அவள் வீட்டில் யாருமில்லையாம் வரச்சொன்னாள்,நாளை என் அலுவலகத்திலும் லீவ் சொல்லிவிட்டேன்  நாளை முழுவதும் ஒரே ஜாலிதான்" என்று கண்சிமிட்டினான் ராஜேஷ்.

                               ராஜேஷ் பிரபல நிறுவனத்தில் உதவி மேலாளர் பொறுப்பில் இருக்கும் 27 வயதும், எடுப்பான தோற்றமும், சாமர்த்தியமான பேச்சும் க் இளைஞன். அவனுக்கு கீழ் இருப்பவர்களின் அன்றாட பணிகளை ஒருங்கிணைத்து மேலாளரிடம் சமர்பிப்பது மட்டுமே அவன் பணி, சில மணிநேரம் மாலை நேரத்தில் மட்டுமே வேலை இருக்கும், மற்ற நேரங்களில் கம்ப்யூட்டரிலும் செல்போனிலுமே அதிகம் மூழ்கியிருப்பான், இணையதள சாட்டிங்கில் சந்திக்கும் பெண்கள், சில நேரங்களில் ராங் நம்பர்களில் கிடைக்கும் பெண்கள், என அனைவரிடமும் பேசி எளிதில் நண்பனாகி விடுவான், அவர்களின் மனப்போக்கை அறிந்தபின்  சற்று பலவீனமானவர்களை தன்வசப்படுத்தி "காரியம்" சாதித்துக்கொள்வான், பிறகு அவர்களை தவிர்த்து விட்டு அடுத்த முயற்சியில் இறங்கிவிடுவான்.

                                                     "எப்படி உன்னால் மட்டும் இப்படி பெண்களை எளிதில் உன் வலையில் வீழ்த்த முடிகிறது? உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குடா!" என்றான் குமார். "கொடுத்துவச்சவண்டா நீ வாழ்ந்தால் உன்ன மாதிரி வாழனும் "என்றான் குரு ராஜேஷ் பெருமிதத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் . "ரொம்ப புகழாதிங்கடா அவன் செருப்படி வாங்கிய கதை எல்லாம் எனக்குதான் தெரியும், முதலில் எச்.ஐ,வி. டெஸ்ட் செய்ய வேண்டும் இவனிடம்" என்றான் சந்தோஷ். "இது உன் வாழ்வில் அடிக்கடி நடப்பதுதானே  அப்புறம் என்னடா புதுசா இதுக்காக பார்ட்டி என்றனர் அனைவரும். "பாதுகாப்பாக தவறுகள் செய்யும் போது பயப்படத்தேவையில்லை" என தன் தவறை  நியாயபடுத்தினான் ராஜேஷ்!

                               "இது என் வாழ்வில் நான் அடையப்போகும் 25 வது பெண் அதனால்தான் இந்த வெள்ளி விழா பார்ட்டி என்றவனிடம் "இதையும் கூட குறித்து வைப்பாயா" என்று கிண்டலடித்துக்கொண்டே பார்ட்டியை ஆரம்பித்து  உற்சாகபானத்தில் மிதந்து கொண்டிருந்தனர், 
                                                                                    "எனக்கென்னவோ நீ இப்படியே தவறான வழியில் போய்க்கொண்டிருப்பது நல்லதில்லை எனத் தோன்றுகிறது" என்று வழக்கம் போல  அறிவுரையை ஆரம்பித்தான் சந்தோஷ்.  ராஜேஷ் சிரித்துக்கொண்டே "நல்லவனவே இருந்து என்ன சாதிக்கப்போகிறோம் இறந்த பிறகு சிலையா வைக்கப்போகிறார்கள், இருக்கும் வரை சந்தோசமாக வாழ்ந்துவிட்டு போய் விடவேண்டும்! மாட்டிக்கொள்ளாமல் தவறு செய்வதில்தான் நம் சாமர்த்தியம் இருக்கிறது! சரியா, தவறா என்பது பற்றி எல்லாம் கவலைப்படக்கூடாது" என்று அவன் அறிவுரைக்கு முற்றுப் புள்ளி வைத்தான்.

                                               மறுநாள் காலை அவளுடைய வீட்டிற்கு அருகில் சென்ற அவளுக்கு பல முறை போன் செய்தான் அவள் எடுக்கவில்லை,  என்ன செய்யலாம் என யோசித்திக்கொண்டே பக்கத்து சாலையில் இருந்த கடையில் சிகரெட் ஒன்றை வாங்கி பற்றவைத்து, ஒரு டீயை வாங்கி குடித்துவிட்டு அரை மணி நேரம் கழித்து "செல்லக்குட்டி" என்ற பெயரில் சேமித்த அவள் எண்ணிற்கு மீண்டும் அழைத்தான் , அழைப்பை ஏற்று தான் முக்கிய வேலையில் இருப்பதாகவும் அரைமணி நேரம் கழித்து மீண்டும் தானே அழைப்பதாகவும் கூறினாள்! அதே கடையில் நின்று மேலும் இரு சிகரெட்டுகளையும் ஒரு டீயையும் காலிசெய்தான், 
                                                    ஒரு மணி நேரத்திற்கு பிறகு அவளாகவே போனில் அழைத்து " இன்று வேண்டாம் ,நீ புறப்படு! இன்னொரு நாள் நானே சொல்கிறேன், இரண்டு நாட்களுக்கு போன், sms என எதுவும் செய்யாதே, என் சூழ்நிலை சரியில்லை" என்று சொல்லி இணைப்பை துண்டித்தாள், மிகுந்த ஏமாற்றத்துடன் அருகில் இருந்த தியேட்டரில் ஒரு படத்தை பார்த்து,மாலை கடற்கரை சென்று , இரவு பாரில் நன்கு குடித்துவிட்டு அறையில் வந்து   தூங்கிவிட்டான். 
                                                       அடுத்த நாள் காலை தாமதமாக எழுந்ததால் அவசரமாக அலுவலத்திற்கு புறப்படும்போது நான்கு போலீசார் வீட்டிற்குள் வந்தனர்.  "நேற்று நடந்த கொலைக்கும் உனக்கும் தொடர்பு இருப்பதால் உன்னை கைதுசெய்கிறோம் " என்றபடி கையில் விலங்குடன் நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் . என்ன கொலை என்று கேட்டபோது  அருகிலிருந்த அன்றைய செய்திதாளை எடுத்து என் கையில் கொடுத்தார் இன்ஸ்பெக்டர் அதில் " சென்னையில் இளம்பெண் கொடூரகொலை, கொலை செய்த கணவன் தற்கொலை "என்றபெயரில் இருந்த செய்தில் நேற்று தன் வீட்டுக்கு வரச்சொல்லி ஏமாற்றி அனுப்பியவள் பிணமாக கிடந்தாள். ராஜேசிடம் அவன் செல்போனை வாங்கிய இன்ஸ்பெக்டர் அதிலிருந்த  "செல்லகுட்டி" எண்ணையும் அந்த எண்ணுக்கு அனுப்பப்பட்ட & பெறப்பட்ட sms கலையும் பார்த்த்உ முகம்சுழித்தார், 

                                                பின் அவனிடம் "அவளை கொலை செய்த கணவன் "அவளுடைய கொலைக்கும் என் தற்கொலைக்கும் காரணம்  அவளுடைய சில கள்ளக்காதலர்கள்தான்" என் கடிதம் எழுதிவைத்து தற்கொலை செய்துள்ளான். அவளுடைய செல்போனை வைத்து நாங்கள் விசாரித்த வரையில் கடந்த ஒரு மாதமாக நீதான் அவளுடன் அதிகம், தொலைபேசி மற்றும் sms வழியாக பேசியிருக்கிறாய், நேற்று கொலைசெய்யப்படுவதற்கு சற்று முன் வரை அவளுக்கு வந்த , மிஸ்டு கால், டயல்டுகால், ரெசிவ்டு கால் அனைத்தும் உன்னுடைய எண்தான், நேற்று முழுவதும் நீ அலுவலகத்திற்கும் செல்லவில்லை, அவள் வீட்டருகே இருந்த கடையில் இரண்டுமணி நேரமாக இருந்திருக்கிறாய்" கொலையை நீ செய்யாவிட்டாலும் அவள் கொலைசெய்யப்படுவதற்கு நீதான் முக்கியகாரணமாக இருந்திருக்கிறாய், இனி தண்டனையிலிருந்து தப்பிக்கவே முடியாது ராஜேஷ்" என்றபடி  கையில் விலங்கை மாட்டினார் இன்ஸ்பெக்டர்.

                                                   " செய்த தவறுகளில் இருந்து தப்பித்தாக பெருமைப்படும் ஒருவன், ஒரு நாள் செய்யாத தவறால் பாதிக்கப்படும்போது நிச்சயம் வருத்தப்படுவான்" என்று எப்போதோ சந்தோஷ் சொன்ன அறிவுரை நினைவுக்குவர, கதறி அழ ஆரம்பித்தான்.



Monday, October 31, 2011

நூடுல்ஸ் - சிறுகதை (வம்சி சிறுகதை போட்டிக்கு)


                                                      பிரகாஷ் வீட்டிற்குள் வந்ததும், சற்றுமுன் பணி முடிந்து வீட்டிற்கு வந்து. தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த விஜி சட்டென எழுந்து சமையலறைக்குள் நுழைந்தாள், உடை மாற்றிவிட்டு அவனும் சமயலறைக்குள் வந்தான், இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர், அவனாக பேசுவான் என்று அவள் எதிர்பார்த்தாள், அவளாக பேசுவாள் என்று அவன் எதிர்பார்த்தான் இருவரும் பேசிகொள்ளவில்லை, தண்ணீரை குடித்து விட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்தான் பிரகாஷ்
                                                             
                                                      விஜி பிரகாசுடன் பேசி இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டது! இருவரும் ஒரே மென்பொருள் துறையில் அதிக சம்பளத்தில் வேலை பார்க்கும் காதல் தம்பதிகள், பிரகாஷ் விஜியை விட அந்த நிறுவனத்தில் மூன்று வருடம்  சீனியர்,  ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது அவ்வப்போது நட்பாக பேசிகொண்ட பழக்கம்.  புத்தகம்,கதை, கவிதை, திரைப்படம் என பல விதங்களில் ஒரேவித ரசனை கொண்டவர்களாக இருந்ததால் நாளடைவில் அது காதாலாக மாறியது! முதலில் இருவர் வீட்டிலும் மறுத்தாலும் சில நண்பர்கள் உதவியுடன் சமாதானம் பேசி நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் இணைந்தனர்.

                                                      இப்பொழுது இருவரும் அதிக சம்பளத்திற்காக வேறு வேறு நிறுவனங்களுக்கு மாறிவிட்டனர். காதலிக்கும்போது பிடித்த குணங்களை மட்டும் கவனித்து ரசித்தவர்கள் திருமணமாகி சில மாதங்களுக்கு பிறகு பிடிக்காத குணங்களை குறை சொல்லி கண்டிக்கத்தொடங்கும்போது   பிரச்சனைகள் ஆரம்பமானது, ஒரே ரசனை கொண்டவர்கள் என்பது காதலுக்கு காரணமாக இருந்தது போல் அதுவே பிரச்சனைகள் பெரிதாகவும் காரணமாக இருந்தது, அவளுக்கு கோபம் வந்தால் அவனுக்கும் கோபம் வருகிறது, சண்டைக்குப் பின் அவள் முதலி இறங்கி சமாதானத்திற்கு வராமல் அவன் இறங்கி வரட்டும் என நினைப்பாள் , அவளும் அவன் இறங்கி வரட்டும் என நினைப்பான், இருவருக்குமே ஈகோ அதிகம்.

                                       இப்படியே ஒரு வாரம் கூட ஒரே விட்டிற்குள் பேசிக்கொள்ளாமல் இருப்பார்கள், பிரகாஷ் வெளியில் சாப்பிட்டு வருவான், விஜி அவளுக்கு மட்டும் சமைத்து சாப்பிட்டுக்கொள்வாள், ஒரு வாரத்திற்கு பிறகு அடிக்கடி இவர்கள் வீட்டிற்கு வரும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வரும்போது எதுவுமே நடக்காதது போல் பேசிக்கொண்டு அதை அப்படியே தொடர்ந்து இணைந்துகொள்வார்கள், அவ்வப்போது பிரிதல் சேர்தல் என சில மாதங்களாக இது தொடர்கிறது, அந்த பிரிவுக்காலம் இருவருக்குமே மிக இம்சையானதாவே இருக்கும் ஆனால் இருவ்ரும் அதை வெளிகாட்டமாட்டார்கள், 
                                                                                   மற்ற தம்பதிகளைப்போல் அன்றைய சண்டைக்கு அன்றே சமாதானமாகிவிடவேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதற்கு தான் முதலில் இறங்கிச்செல்ல வேண்டும் எண்ணத்தை, இத்தனை வருடங்களாக அவர்களுடன் வளர்ந்து வந்த ஈகோ எண்ணம் தடுத்தது! இதற்கு ஏதேனும் தீர்வு காணவேண்டும் என்று நினைத்த படியே தொலைக்காட்சியில் இருவருக்கும் பொதுவாக பிடித்தமான, எழுத்தாளர்களுக்கும் இலக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்த சேனலுக்கு மாற்றினான் பிரகாஷ். அந்த சேனலின் அன்றைய நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல புதுக்கவிதை மற்றும்  நவீனத்துவ எழுத்தாளர் தமிழன்பனும், அவரது மனைவி மரபு கவிதை மற்றும் பாரம்பரியம் பற்றி எழுதும் கவிதாயினி ரமணிகா வும் பங்கேற்று பேசிக்கொண்டிருந்தனர். 

                                                      அவர்களிடம் பேட்டியாளர் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் சொல்லிகொண்டிருந்ததை, விஜி, பிரகாஷ் இருவருமே சற்று தள்ளி அமர்ந்து ஆர்வமாக ரசித்துக்கொண்டிருந்தனர். அப்போது நிகழ்ச்சியின் பேட்டியாளர் " தம்பதிகளாக இருந்தாலும் எழுதுவதில் இருவரும் நிறைய முரண்பாடுகளுடன் இருக்கிறீர்கள், உங்களுக்கு நிச்சயம் சண்டை வரும் எப்படி சமாதானம் ஆவீர்கள்" என்று கேள்வி ஒன்றை கேட்டார், அதற்கு தமிழன்பன் சில நேரங்களில் அவுங்களே வலிய வந்து பேசிருவாங்க நாங்க சமாதானம் ஆகிடுவாங்க, சில நேரங்களில் என் மீதே அதிக தவறு இருக்கும் அப்போது அவுங்க பேச மாட்டாங்க, எனக்கு கொஞ்சம் ஈகோ அதிகம், அதானல் நானும் வலிய போய் பேச மாட்டேன் அதுக்கு பதிலா அவுங்களுக்கு ரொம்ப பிடிச்ச எதாவது ஒன்ன வாங்கிட்டு போவேன், அது நான் மன்னிப்பு கேட்பதாக அர்த்தம், , "வார்த்தைகளால் மன்னிப்பு கேட்க முடியாத சில இடங்களில் செயல்களால் மன்னிப்பு கேட்பது சுலபம்!" என்னை அவுங்க புரிஞ்சுகிட்டு சிரிச்சுடுவாங்க,அப்புறம் சகஜமாகிடுவோம் என்றார்'. அடுத்த சில நிமிடங்களில் நிகழ்ச்சி முடிவடைந்துவிட்டாலும் அவர் சொன்ன விசயம் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டே வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடக்க ஆரம்பித்தான் பிரகாஷ், 

                                                     இனி நாமும் அவளுக்கு பிடித்ததை வாங்கிகொடுத்து உடனே சமாதானமாகிவிட வேண்டும், அவளுக்கு என்ன பிடிக்கும் என யோசித்தான் பெரிய பட்டியலே வந்தது, அதில் இப்பொழுது உடனே வாங்கக்கூடியது என்ன என்று நினைத்தபோது "நூடுல்ஸ்" நியாபகம் வந்தது, காதலிக்கும்போது உணவகத்திற்கு செல்லும்போது பலநேரங்களில் நூடுல்ஸ்தான் ஆர்டர் சொல்லி சாப்பிட்டிருக்கிறார்கள்!, திருமணமான புதிதில் வீட்டில் சாதம் சமைக்காத நேரங்களில் நூடுல்ஸ்தான் சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள், உடனே அருகில் இருந்த கடையில் ஒரு நூடுல்ஸ் பாக்கெட்டை வாங்கிக்கொண்டு வீட்டிற்குள் வந்தான் பிரகாஷ்,
                                                           முதலில் எதாவது பேசி அவளிடம் இதை கொடுப்போமா? அல்லது இதை வாங்கி அவள் சிரித்த பின்பு எதாவது பேசுவோமா? என்று யோசித்துகொண்டே சாப்பிடும் மேசையில் அமர்ந்தான், அப்பொழுது விஜி சமையலறையிலிருந்து சூடாக ஆவிபறக்க அவனக்கும் பிடித்தமான சமைத்த நூடுல்ஸுடன் அவன்முன் வந்து நின்றாள், அவன் கையிலிருந்த நூடுல்ஸ் பாக்கெட்டை அவள் பார்த்தாள், அவள் கையிலிந்த சூடான நூடுல்ஸை அவன் பார்த்தான்.சற்றே கலங்கிய கண்களுடன் இருவரும் சிரித்துக்கொண்டார்கள். அதன்பின் அவர்களின் சண்டைகளை அப்போதே தீர்க்கும் அவர்களுக்கு பிடித்தமான "நூடுல்ஸ்" இப்பொழுது அவர்களின் குழந்தைக்கும் பிடிக்கிறது!

-- 

(குறிப்பு:- ஒரேவித  ரசனைக்காக மட்டும் காதலிப்பவர்களின் வாழ்க்கையில் அதே ரசனையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது என்ற ,எப்போதோ ஏதோ ஒரு கதையில் படித்த கருத்தை  இதில் சேர்த்திருக்கிறேன்)

Friday, October 28, 2011

வினை - சவால் சிறுகதை-2011


                                                             காவல்துறை உயரதிகரிகளின் முக்கிய கலந்தாய்வில் இருந்த எஸ்,பி.கோகுல்ராமின் கையில் இன்பார்மர் விஷ்னு அனுப்பிய கடிதம் கொடுக்கப்பட்டதும் மிகவும் பரபரப்பாக இருந்தார்.
விஷ்னு சென்னையின் மாநகர பகுதியில் உள்ள
ஒரு தனியார் டிடெக்டிவ் ஏஜென்சியின் உரிமையாளர்  தயாளனுக்கு உதவியாளராக புதிதாக பணிக்கு சேர்ந்துள்ளவன், ஒருவரை பின் தொடந்து உளவு பார்த்து அவர்கள் பற்றிய தகவல்களை திரட்டி அனுப்புவதே அவர்களின் பணி, பல்வேறு காரணங்களுக்க்காக இந்த பணியை பலருக்கு செய்தாலும்
காவல்துறைக்காகவும் சில முக்கிய வழக்குகளில் உதவுவார்கள்,

                                                          உளவுத்துறை சமீபத்தில் "வெளிநாட்டு தீவிரவாதிகளின் புதிய திட்டத்தின் படி ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் நட்டிற்குள் வந்து இங்கிருக்கும் உள்ளூர் நபர் மூலமாக தங்கள் திட்டத்தை நிறைவேற்றிவிடுவார்கள், என தகவல் அனுப்பியிருந்தது. அதை உறுதிப்படுத்துவது போல் சில நாட்களுக்கு முன் சென்னை புறநகர் பகுதியில்
தேர்தலில் பணபரிமற்றத்தினை தடுக்க நடந்த வாகன சோதனையின் போது, பெரும் பணத்துடன் பிடிபட்டவன் வெளிநாட்டினை சேர்ந்த தீவிரவாதி கசாப் என்று தெரிந்தது,  இதன் ரகசிய விசாரணையின் போதுதான் தயாளனின் டிடெக்டிவ் ஏஜென்சியின் உதவியையும் நாடினார் எஸ்.பி.கோகுல் , அவர் தந்த சில தகவலின் படி விஷ்னுவும் தயாளனும் விசாரிக்க தொடங்கினர்,
இந்த சூழ்நிலையில் விஷ்ணு அனுப்பிய கடிதத்தில்

Mr.கோகுல்
S W H2 6F இதுதான் குறியீடு கவனம்.
விஷ்ணு
என்று அந்த குறிப்பிடப்பட்டிருந்தது, இதை பல விதங்களில் யோசித்துபார்த்தும் அந்த குறியீட்டின் அர்த்தம் புரியவில்லை, விஷ்னுவின் செல்பேசி எண்ணுக்கு அழைத்தாலும் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது,நேராக அருகில் இருந்த தயாளனின் அலுவலகத்திற்கு செல்லுமாறு தன் டிரைவருக்கு உத்தரவிட்டார்,
அலுவலகத்திற்கு சென்றதும் அங்கு செக்யூரிட்டி மட்டும் இருந்தார், தயாளனுக்கு "எங்கு இருக்கிறீர்கள்" என போன் செய்தால்
 " அலுவலகத்திற்குதான் வந்து கொண்டிருக்கிறேன் அங்கு இருங்கள் பத்து நிமிடங்களில் வந்துவிடுகிறேன்" என்றார்.

அலுவலகத்தில் தயாளனின் அறைக்குள் சென்ற எஸ்.பி.கோகுல் மின்விசிறியை சுழலவிட்டு இருக்கையில் அமர்ந்து, சுற்றும் முற்றும் பார்த்தபோது மேசையின் மீதிருந்த டைரியினுள் கவர் ஒன்று இருந்தது! அதை பிரித்து படித்த போது அந்த கடிதத்தில்

Sir
எஸ்.பி.கோகுலிடம் தவறான குறியீட்டைதான் கொடுத்திருக்கிறேன் கவலை வேண்டாம்.
-விஷ்ணு
என்று குறிப்பிடப்பட்டிருந்தது,தனக்கு விஷ்ணு அனுப்பிய கடித்தையும் எடுத்து இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தார்,  ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட பிரிண்ட் போல் தோன்றியது, விஷ்ணு ஏன்தவறான தகவல் கொடுத்தான், தாயாளன் ஏன் அப்படி கொடுக்க சொன்னார். அப்படியானால் இவர்களுக்கும் தீவிரவாதிகளுக்கும் ஏதோ தொடர்பிருக்கிறதா என கோகுல் மேலும் குழப்பமடைந்தார்,. அந்த நேரத்தில் அவர் செல்பேசி ஒலித்தது, எடுத்து பார்த்தால் இன்பார்மர் விஷ்ணு ,அழைப்பை ஏற்றதும்   கோபமாக "ஏன் போனை அணைத்து வைத்திருந்தாய் என்றார் கோபமாக,
                                                                    எதிர் முனையில் விஷ்ணு " சார் மன்னிக்கவும் ஒரு கையில் வாகனம் ஓட்டிகொண்டே தயாளன் சாரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது எனது போன் கீழே விழுந்து ரிப்பேராகிவிட்டது அதனால் இரண்டு மணி நேரமாக என்னால் யாருடனும் பேசமுடியவில்லை, யாருடைய போன் நம்பரும் எனக்கு நினைவில் இல்லை அனைத்தும் சிம் கார்டில்தான் உள்ளது ,அதனால் தான் எனக்கு கிடைத்த தகவலை உடனடியாக தெரிவிக்க முடியவில்லை,   விரைவாக தெரிவிப்பதற்காகவே என்னுடைய உயிர் நண்பன் ராகவனுடைய போன் நம்பர் நினைவில் இருப்பதாலும், அவன் உங்கள் அலுவலகத்திற்கு அருகில் இருப்பதாலும் அவனிடம் கடிதம் மூலம் தகவலை தெரிவிக்க சொன்னேன் இப்பொழுது கூட என்னுடைய சிம்கார்டை இன்னொரு நண்பரின் போனில் பொருத்தி பேசுகிறேன், நான் அனுப்பிய குறியீடு கிடைத்ததா சார்" என்றான். மறு முனையில் கோகுல் அதே கோபத்துடன் "நீயும் தயாளனும் என்னிடம் எதையோ மறைக்கிறீர்கள், எதற்காக எனக்கு தவறான தகவலை கொடுத்ததாக தயாளனுக்கும் கடிதம் அனுப்பியிருக்கிறாய்? உண்மையை சொல்!" என்றார் கோகுல்,

"அதை பார்த்துட்டீங்களா சாரி சார், நான் உங்களுக்கு அனுப்பிய குறிப்பு  உண்மைதான்,அந்த குறிப்பின் அர்த்தம் SW means Street name Wamanan  H2 means House number 2
6F means Six Face, அதாவது நீங்கள் தீவிரவாதியை பிடித்த அதே பகுதியில் உள்ள வாமணன்  தெருவில் 2ம் எண் வீட்டில் உள்ள ஆறுமுகம் என்பவனுக்கும் பிடிபட்ட அந்த தீவீரவாதி கசாப்பிற்கும் ஏதோ தொடர்பு இருந்திருக்கிறது! உங்களிடம் விரிவாக சொல்லச் சொல்லி நண்பனிடம் சொன்னேன் நீங்கள் முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாக சொல்லி அனுமதி மறுத்துவிட்டனர்.                    நான் இங்கு வந்தபோது அந்த ஆறுமுகம் தங்கியிருந்த வீடு நமது தயாளன் சாருடைய மாமனாருக்கு சொந்தமானது என்றும் , அவனை பற்றி எதுவும் தெரியாமல் கூடுதல் வாடகைக்கு ஆசைப்பட்டு வீட்டை வாடகைக்கு கொடுத்துள்ளனர், யாரோ, யாரையோ கொல்வதற்கு தெரியாமல் உதவும் கொசுறு வேலைக்கு கூட தூக்கு தண்டனை கொடுக்கும் சூழல் இங்கு நிலவுவதால் அவர்களுக்கு ஏதாவது ஆகி, அதனால் தன் மனைவியின் கோபத்தில் தன் குடும்ப வாழ்க்கை பாதிக்கும் என நினைத்து தங்கியிருக்கும் இடத்தை மட்டும் சொல்லவேண்டாம் என்றார், அதற்குள் போன் கீழே விழுந்துவிட்டதால், காப்பாற்ற நீங்கள் இருக்கும் தைரியத்தில் அவரின் தற்காலிக ஆறுதலுக்கு அப்படி ஒரு கடிதத்தை
அதே நண்பனின் மூலம் அனுப்பினேன்! நான் சொன்ன தகவல் முற்றிலும் உண்மை! நான் இப்போது அங்குதான் அருகிலிருப்பவர்களிடம் விசாரித்துகொண்டிருக்கிறேன் உடனே வாருங்கள்" என்றான் விஷ்ணு, குழப்பம் நீங்கினார் எஸ்,பி.கோகுல்.

தீவிரவாதிக்கு உதவிய ஆறுமுகம் இருந்த வீட்டை எஸ்,பி.கோகுல் தலைமையிலான காவல்படை சூழ்ந்தது, வீட்டருகே இஸ்திரி செய்பவரிடம் விசாரித்ததில் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அந்த பையன் முதுகில் காலேஜ் பேக் ஒன்றுடன் பைக்கில் புறப்பட்டு சென்றதாக கூறினார் என்று விஷ்ணு தகவல் சொன்னான். பூட்டியிருந்த வீட்டை உடைத்து   உள்ளே சென்றால் அங்கு ஒரு பையில் சில லட்சங்கள் மதிப்புள்ள பணமும்
 ஒரு சில ஆடைகளும் சில சமையல் பாத்திரங்களும் பட்டுமே இருந்தது அறை மிழுவதும் தேடியும் எந்த தடயமும் காணப்படவில்லை, எஸ்,பி.கோகுல்ராம் அங்கிருந்த ஆடைகளின் சட்டைப்பை மற்றும் பேண்ட்பைகளில்
 கைகளை விட்டு தேடி பார்த்தார் இரு சிறு காகிதம் இருந்தது அதில் "அன்றைய தேதி , தியேட்டர், ரயில்வே ஸ்டேசன் ,பஸ்டாண்டு, மார்க்கெட்,என்று குறிப்பிடப்பட்டிருந்தது,  எங்கோ வெடி குண்டு வெடிக்க சதி செய்துள்ளார் என்ற உண்மை புரிந்ததும் உடனடியாக அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சோதனையிட உத்தரவிடப்பட்டது,

                                               அதே நேரத்தில் ஆறுமுகம் கிடத்த சில லட்சங்களையும் காரியம் முடித்தபின் கிடைக்க போகும் பல லட்சங்களையும் நினைத்து இனி இப்போது செய்வது போல் சிறு சிறு திருட்டு கும்பலுடன் சேர்ந்து கொள்ளையடிப்பது, கூலிக்கு அடியாளாக வேலைக்கு செல்வது போன்ற வேலைகளை செய்யாமல் இது போன்ற பெரிய காரியங்கள் சிலவற்றை செய்து வாழ்க்கையில் பெரிய அளவில் செட்டிலாகிவிட வேண்டுமென்று எண்ணி உற்சாகமாக பைக்கை விரட்டினான்! வெடிகுண்டு வெடிப்பதற்கு இன்னும் ஒரு மணி நேரம்தான் இருக்கிறது , பத்து நிமிடத்தில் மார்க்கெட் போய்விடலாம்  அங்கு தன் முதுகிலிருக்கும் வெடிகுண்டு பையை ஒரு ஓரமாக வைத்து வந்துவிட்டால் வேலை முடிந்தது,

                                              அதிக மக்கள் கூடும் காய்கனி மார்க்கெட்டை நெருங்கிக் கொண்டிருக்கையில் அவனை மறித்து பெரிய சுமோ வேன் ஒன்று நின்றது, கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் உள்ளே இழுக்கப்பட்டு அதன் கதவுகள் சாத்தப்பட்டன, வேன் ஆட்களற்ற புறநகர் பகுதியை நோக்கி திரும்பியது. உள்ளே  இருந்த விஜயாவின் அப்பா, அண்னன், அவனது நண்பர்களை பார்ததும் அதிர்ச்சியடைந்தான் ஆறுமுகம், மற்றவர்கள் பிடித்துகொள்ள விஜயாவின் அண்னன் அவன் முகத்தில் எட்டி உதைத்து "ஏண்டா திருட்டுநாயே, உன்ன நல்லவன்னு நம்புன என் தங்கச்சிய காதலிக்கிறதா சொல்லி நெருங்கி பழகிட்டு , அவள் கர்பமானதும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு ஏமாத்திட்டு ஊரைவிட்டு ஓடி வந்துட்ட,  அவ அவமானத்துல தற்கொலை பண்ணிக்கிட்டா தெரியுமா, உன்ன தேடிட்டு இருந்தோம், நீ இங்க இருக்குறதா நேத்துதான் தகவல் கிடைச்சது, அவ சாவுக்கு காரணமான நீ இந்த உலகத்துலேயே இருக்க கூடாதுடா" என்று கோபமாக கூறிய படியே அவன் வயிற்றில் முதல் கத்தியை இறக்கினான். அடுத்த சில நொடிகளில் மேலும் சில கத்திகள் இறங்க தன் தவறுகள் அனைத்தும் நினைவில் தெரிய உயிரற்ற உடலாய் சரிந்தான் ஆறுமுகம், கண்ணுக்கெட்டும் தூரம்வரை  கட்டிடமோ, ஆட்களோ யாருமில்லாத   புற நகரின் ஒதுக்குபுற பகுதியில் அவனது உடலை முதுகில் தொங்கிய பையுடனே வீசிவிட்டு சென்றார்கள். அவர்கள் புறப்பட்டு சென்ற சில நிமிடங்களில் ஆறுமுகத்தின் உடலும் தீவிரவாதிகளின் திட்டமும் வெடித்து சிதறிக்கொண்டிருந்தன.

(குறிப்பு:- யுடான்ஸ் நடத்தும் சவால் சிறுகதை போட்டிக்கு எழுதியது)