Friday, January 05, 2007

என்னை சுற்றி!
என்னை சுற்றி நான் சந்தித்த ச‌ம்பவங்கள்& மனிதர்கள்,
என்னை சுற்றி நான் அறிந்த & உணர்ந்த கருத்துக்கள்,
என்னை சுற்றி நடந்த‌ சுவரஸ்யமான நிகழ்வுகளில்
சில‌வற்றை எழுதுகிறேன்

(இது போன்று எழுதுவ‌த‌ற்கு, அறிவும், த‌குதியும் மிக‌ குறைவு இருந்தாலும் சொல்ல‌ வ‌ரும் விச‌ய‌ங்க‌ளை சிற‌ப்பாக‌ சொல்ல‌ முடியும் என்ற‌ ந‌ம்பிக்கையில் எழுதுகிறேன்)

என்னை சுற்றி!

(கஷ்டம் அதிகமானல்)

கல்லூரி முடித்ததும் ,சில மாதத்தில்ஒரு விவசாயத்திற்கு தேவையான , நுண்ணுரங்கள்,பூச்சிகொல்லி மருந்துகள்,போன்றவை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் களப்பணியாளராக 3 ஆண்டுகள் வேலை பார்த்தேன்(2001,2002, 2003).
எங்கள் வேலை கிராமம் கிராமமாக விவசாயநிலங்களுக்கு விவசாயிகளை சந்தித்து எங்கள் நிறுவன தயாரிப்புகளை பரிந்துரை செய்ய வேண்டும், ஒருமுறை விளாத்திகுளம் அருகே ஒரு விவசாயியை பார்க்க சென்றிருந்தேன், அவர் கடையில் டீ சாப்பிட்டுகொண்டிருந்தார், என்னை அறிமுகம் செய்து கொண்டேன், "சற்று பொறுங்க தம்பி" என்று எனக்கும் சேர்த்து டீ சொல்லி விட்டு நண்பருடன் பேச்சில் ஆர்வமானார்,, இந்த‌ வேலைக்கு பொறுமைதானே மிகவும் அவசியம்,
அவர்களின் பேச்சை கவனித்தேன், விவசாயி பக்தி உள்ளவர், அவரது நண்பர் நாத்திகர், அந்தவழியாக திருச்செந்தூருக்க்கு சிலர் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தவர்களை பார்த்து அவர் நண்பர் "பாத யாத்திரையாக போனால்தான் சாமி அருள் கொடுக்குமா, சாமி இப்படி வர சொல்லுச்சா உங்களை" ஏன்யா இப்படி வெட்டிவேலை செய்யுரிங்க" என்றார்,

அதற்கு விவசாயி " மாப்ள நீ ஒரு மில்லுல வேலை பார்கிற, உனக்கு 8 மணி நேர வேலைக்கு 80 ரூபா சம்பளம், அதே மில்லுல ஓவர் டைம்(O.T) நாலு மணிநேரம் சேர்த்து 12 மணி நேர‌ம் வேலை பார்க்குற 120 ரூபா சம்பளம், இதில் எது சுலபம் எது கஷ்டம்""என்றார்
"8மணி நேரம் சுலபம் 12 நேரம் கஷ்டம்"என்றார் நண்பர்
""8மணி நேர சுலப‌ வேலைக்கு 80 ரூபா சம்பளம்12 மணி நேர கஷ்டமான வேலைக்கு 120 ரூபா சம்பளம்"",

இதுல இருந்து என்னா தெரியுது கஷ்டம் அதிகமான பலன் அதிகமா கிடைக்கும், ""சும்மா சாமி கும்பிட்டா கிடைக்கிற பலன விட! மனசு சுத்தமா , விரதமிருந்து..நடந்து நம்மை நாமே கஷ்டபடுத்தி கிட்டு கும்பிட்டால் அதோட பலன் அதிகமா இருக்கும் அதான் இப்படி எல்லாம்" "சிலர் இது தெரியாம இதோட நோக்கத்தையே மற‌ந்திடுறாங்க"
" அது மட்டுமில்ல மாப்ள இந்த உலகத்துல நல்லவனா வாழுறதும் கஷ்டம் வாழ்ந்தா அதற்கு பலன் அதிகம்,"" என்று சொல்லி அவரை பதில் பேசமுடியாமல் செய்து விட்டார், என்னை சுற்றி நான் கற்றதில் அவரின் " கஷ்டம் அதிகமானல் பலன் அதிகமாகும்" என்ற‌ வார்த்தை அடிக்கடி நம்பிக்கை கொடுக்கும் வார்த்தை,

No comments: