Monday, January 15, 2007

பொங்கட்டும் பொங்கல்!

தைத்திருநாளான தமிழர் பெருநாளில் இனிப்பான கரும்பையும்,பொங்கலையும் போல ,மகிழ்ச்சியும் , மன நிறைவும் பொங்கி வ‌ழிய ,மஞ்சளை போல மங்களகரமான வாழ்வு அமைய வாழ்த்துக்கள்

பொங்கட்டும் பொங்கல்!

பசியின்றி,வேலையின்றி
எல்லோரும் பள்ளிசெல்ல‌
குழந்தைகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

அடிமைத்தனம் அழித்துவிட்டு
பண்பாடு பாதுகாக்க‌
பெண்களின் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

போதைதரும் பாதைநீங்கி
பொறுப்புடனே உழைத்துயர‌
இளைஞர்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

நன்மையான வ‌ழிசொல்லி
துன்பத்தில் துணைநிற்கும்
நண்பர்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

இறுதிவரை பிரிவின்றி
இன்பமாய் இணைந்துவாழ‌
தம்பதிகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

உழைப்பின் விளைச்சலுக்கு
உயர்வான விலைகிடைக்க‌
உழவர்களின் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்

ஊழலின்றி உண்மையாக‌
நேர்மையுடன் பணியாற்ற‌
அதிகாரிகள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

சாதி,மத பேதமின்றி
சமத்துவமாய் இணைந்துவாழ!
பொதுமக்கள் வாழ்வில்
பொங்கட்டும் பொங்கல்!

துன்பத்தில் அறிவுயர்ந்து
இன்பத்தில் அன்புயர்ந்து
எல்லோரும் நல்லோராக‌
பொங்கட்டும் பொங்கல்!
~நம்பிக்கை பாண்டியன்

No comments: