Tuesday, January 09, 2007

உன் காதலுக்கு நன்றி

"உன்னைப் போல
என் மனதைக் கவர்ந்தவர்கள்
யாருமே இல்லை" என்றாய் !

"உன்னைப்
பார்க்காவிட்டால் அன்று
தூக்கம் வருவதில்லை" என்றாய்!

உன்னுடன் பேசாவிட்டால்
அன்று முழுவதும் எதையோ
இழந்தது போல இருக்கிறது" என்றாய்!

"நான்" உனக்கு
மட்டும் தான்" என்றாய்!

"நீ இல்லாத
வாழ்க்கையயை என்னால்
கற்ப்பனை செய்து கூட
பார்க்க முடியவில்லை என்றாய்!

"நம்மைப் பிரிக்க
யாராலும் முடியாது"என்றாய்!

காதலின் வேகத்தில்
அடுக்கடுக்காய்
வந்து விழுந்தன வார்த்தைகள்

அத்தனையும் மறந்துவிட்டு
"இனி நாம்
பிரிவதை தவிர
வேறு வழி இல்லை"என்றாய்!

தலைஎழுத்தையும்
அடுத்த ஜென்மத்தையும் சொல்லி
போலித்தனமான ஆறுதல் தேடினாய்!
இள‌மைக்காக‌
காதலித்திருந்தால்
இதுபோனால் இன்னொன்று
என்றிருப்பேன்!

வாழ்க்கைக்காக
காத‌லித்த‌தால்தான்
வ‌லிக்கிற‌து என்கிறேன்!

அழுது கொண்டிருக்கும்
என் க‌ண்களுக்கு
காலம் ஆறுதல் சொல்லும்!

நம் காதலை
என்னால் மறக்க முடியாதுதான்!
ஆனால்
எதற்க்கும் பயன்படாத
வீண் நினைவுகளை
நிச்சயமாக குறைக்க முடியும்!


விடை த‌ராத‌ உன்
மாற்ற‌ங்க‌லை மற‌ந்து!
த‌டை வ‌ராத‌ என்
ல‌ட்சிய‌ங்க‌ளில் நிறைகிறேன்!


இனி
என் வாழ்வில்
எந்த ஒரு ஏமாற்றத்தையும்
சாதாரணமாக எடுத்துகொள்ளும்
மனப் பக்குவத்தை கொடுத்த
உனக்கு ஒரு நன்றி!
உன் காதலுக்கு ஒரு நன்றி!

~நம்பிக்கைபாண்டியன்

No comments: