Thursday, August 20, 2009

அழிந்த கர்வம்! - கவிதை



காத்திருக்கும் வாகன‌ங்களை
கர்வத்துடன் கடந்த ரயில் !
மற்றொரு நிலையத்தில்
காத்திருக்க தொடங்கியது
விரைவு ரயிலுக்கு வழிகொடுக்க!.....
~நம்பிக்கைபாண்டியன்

படக்கவிதை!

நல்ல தூக்கம்தான்
எழுப்பியவன் மேல்
கோபம் வரவில்லை
இறங்க வேண்டிய
இடம் வந்ததால்

- ந‌ம்பிக்கைபாண்டிய‌ன்

Saturday, March 21, 2009

இன்னும் நீ என்...




இன்னும் நீ என்...

உன்னைக்
காதலித்துவிடுவேனோ?
என்கிற பயத்தில்
ந‌ம் நட்பு வட்டத்திலிருந்து
விலகிச்செல்கிறாய்!

உன்
புரிதலற்ற
விலகுதலையும்

புன்னகையுடன்
சகித்துக்கொள்கிறேன்!

இன்னும் நீ

என் "தோழி" என்பதால்

‍‍


--நம்பிக்கைபாண்டியன்