Tuesday, July 10, 2012

ஆனந்த விகடனின் வலையோசையில் என் வலைபதிவு!


 "ஆனந்தவிகடனின் இணைப்பு புத்தகமான என் விகடனில்,  வலைபதிவில் எழுதி வளர்ந்துவரும் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியாக "வலையோசை"என்ற பகுதியில் ஒவ்வொருவாரமும் ஒவ்வொரு வலைபதிவை அறிமுகப்படுத்திவருகிறார்கள்,

                                         கடந்த வார (04.07.2012) ஆனந்தவிகடனில் தென்மாவட்டங்களுக்குகான மதுரை பதிப்பு என்விகடனில் வலையோசை பக்கத்தில் எனது வலை பதிவை அறிமுகப்படுத்தியிருந்தார்கள்! இதன் வழியாக நூற்றுக்கணக்கானவர்களை சென்றடைந்த என் எழுத்துக்களை  ஆயிரக்கணக்கானோர்  படிக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது, அதற்கு காரணமாக இருந்து, எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை என் எழுத்துக்களை படித்தும் &பாராட்டியும் ஊக்குவித்த  அனைத்து நண்பர்களுக்கும்,   என் வலை பதிவினை அறிமுகப்படுத்தி வெளியிட்ட‌ஆனந்த விகடன் குழுமத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்!

(கடந்த வாரம் எழுத வேண்டிய பதிவு இது பணிச்சூழல் காரணமாக தாமதமாகிவிட்டது)