Friday, July 26, 2013

கபீஷ் கவிதைகள் - மழலை கவிதைகள்!

Inline image 1

கபீஷ் கவிதைகள்

                         1

தொட்டிலில் தூங்கும்போது
அவ்வப்போது அழுது சிணுங்கி
அருகினில் யாரேனும்
இருப்பதை உறுதி செய்து கொண்டு
தொடர்ந்து தூங்குகின்றன குழந்தைகள்!

                         2

தூக்கம், வலி ,பசி, என
தன் தேவைகள்  அனைத்தையும்
 "அழுகை" எனும்
ஒற்றை மொழியில்
சொல்லிவிடுகின்றன  குழந்தைகள்!

                          3

இத்தனை வருடங்களாய்
நான் தூங்கும் நேரங்களை 
நானே தீர்மானித்தேன்- இப்போதெல்லாம்
என் குழந்தை தீர்மானிக்கிறது by  அம்மா!

                           4

பொம்மைகளுடன்
விளையாடும்போது
அதன் விலைகளைப் பற்றியெல்லாம்
கவலைப்படுவதில்லை குழந்தைகள்!


(எனது மகன் கபீஷ்வர்  எனக்கு பரிசளித்த கவிதைகள் இவை!)