Monday, June 30, 2008

சகுனம் ~



நமக்கேற்ற குடும்பமாக இருப்பதால் எப்படியும் இந்தப்பெண்ணை சம்பந்தம் பேசி முத்துவிட வேண்டும் என்று அன்று ஆவலோடு இருந்தால் திருச்சியிலிருக்கும் ஜானகிய‌ம்மாள்.
மகனும் "பெண்ணை பார்த்துவிட்டு பிடிக்கவில்லை என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது"

"நம்மைப்பற்றி அவர்களும், அவர்களை பற்றி நாமும், முன்பே நன்கு விசாரித்து பேசி முடிவெடுத்துவிடுங்கள்,பிறகு விலாசத்தையும் பெண்ணின் புகைபடத்தையும் கொடுங்கள், நான் யாருக்கும் தெரியாமல் பெண்ணை ஒருமுறை நேரில்பார்த்துவிட்டு சொல்லுகிறேன்.புகைப்படத்தில் பெண்ணுக்கும் என்னை பிடித்திருந்தால் பெண்பார்க்க போய் பூ வைத்து உறதி செய்துசெய்துவிட்டு வந்துவிடலாம், இல்லாவிட்டால் பெண்பார்க்கவே செல்லவேண்டாம்!"என்றான் !

அதன்படியே பார்த்துவிட்டு பெண்ணை பிடித்திருக்கிறது என்றான் மகன்.வீட்டில் எந்த நல்லகரியம் என்றாலும் திருச்சி‍_திருவானைக்காவில் வீற்றீருக்கும் அகிலாண்டேஸ்வரியம்மன் கோவிலுக்கு வந்து பிரார்த்தனை செய்து விட்டு ஆரம்பிப்பதே ஜானகியம்மாவின் வழக்கம்.

"நாளை பெண்பார்ப்பதற்கு காலை பத்துமணிக்கெல்லாம் மதுரைக்கு வருவதாக‌ சொல்லிருக்கிறோம்,அப்படியானால் காலை ஆறு மணிக்கெல்லாம் திருச்சியிலிருந்து புறப்பட‌வேண்டும்! அதனால்இன்றே கோவிலுக்கு போய்விட்டு வந்துடுவோம் வாங்க" என்று கணவன் ஜெயராமனை அழைத்துகொண்டு மாலை ஏழுமணிக்கு கோவிலுக்கு சென்றாள் ஜானகியம்மாள்.

இருவரும் அம்மன் தரிசனத்திற் வரிசையில் வந்துகொண்டிருந்தபோது அம்மனுக்கு மிக அருகில் முதல்ஆளாக ‌வந்தபோது திடீரென்று மின்சாரம் தடைபட்டது ஆலயத்திலுள்ள எல்லா மின்விளக்குகளும் அணைந்தன,ஆலயமெங்கும் இருள் சூழ்ந்தது.அடுத்த சில நிமிடங்களில் ஜெனரேட்டர் இயக்கப்பட்டு வெளிச்சம் வந்தது, இருவரும் தரிசன‌ம்முடிந்து கோவிலை சுற்றிவந்து ஒரு இடத்தில் அமர்ந்தனர், ஜெயராமன் கவலை படிந்தமுகத்துடன் அமர்ந்திருந்தார்.


"ஏன் உம்முனு இருக்கீங்க என்றாள்"ஜானகியம்மாள்,
"ஒரு நல்ல காரியத்துக்காக கோவிலுக்கு வந்திருக்கோம் நாம பக்கத்தில் வரும்போது இப்படி அபசகுணம் மாதிரி கரண்ட் போனதால் கோவிலே இருண்டு போய்டுச்சு" அதான் ஒரு மாதிரி இருக்கு இந்த கல்யாணத்தால ஏதாவது சிக்கல் வந்திடுமோனு பயமா இருக்கு" என்றார் ஜெயராமன்.


அதை மறுக்கும் விதமாக மெலிதாக புன்னகையுடன்"கோவிலில் கரண்ட் கட் ஆன விச‌யத்தை ஏன் அப்படி யோசிக்கிறீங்க?அதற்கு பதிலா இப்படி யோசிச்சுப் பாருங்களேன்."

"கோவிலில் எங்குமே செயற்கையான மின்சார விளக்கே இல்லாமல் அம்மன் கருவறையில் இயற்கையான ‌தீபஒளியின் வெளிச்சம் மட்டும் நிரம்பியிருந்ததே அது எவ்வளவு அழகு."


"அதுவும் கருவறை முழுக்க நிறைய தீபங்கள் ஏற்றியிருந்ததால் அவ்வளவு தீபங்களின் வெளிச்சத்தில் அம்மன் பிரகாசமாக தெரிந்ததையும், தீப‌ஆராதனையின்போது அந்த வைரமூக்குத்தியும் தங்ககிரீட‌மும் ஒருநொடிஜொலித்ததை கவனித்தீர்களா!"


"நாம் எத்தனைமுறை இந்த கோவிலுக்கு வந்திருக்கிறோம் ஒருமுறை கூட இப்படி ஒரு அருமையான தரிசனம் கிடைக்கவில்லையே! எத்தனை பேருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்!" "நம்ம சக்திக்கு அப்பாற்பட்டு நடக்கும் எல்லாமே நல்லதுக்குன்னு நினைச்சுக்கோங்க!வீணா கவலைபடாதீங்க! எல்லாம் நல்லபடியா நடக்கும்.நேரமாச்சு வாங்க போகலாம்"என்றாள் ஜானகியம்மாள்,அவளின் பாசிட்டிவ் சிந்தனையை கேட்டு ஆச்சர்யத்தோடு பயம் நீங்கிச்சென்றார் ஜெயராமன்.



***************நம்பிக்கைபாண்டியன்******************

Friday, June 27, 2008

காரணம்!



என் க‌விதைக‌ள்
ந‌ன்றாக‌ இருக்கிறதென்ற‌!
சில‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு
தெரியாது!
அதை
முதலில் படித்தவள்
நீ என்பது!

~நம்பிக்கைபாண்டியன்


Wednesday, June 18, 2008

பாசம்!


தாத்தா

பாட்டி

அப்பா

அத்தை

யாருக்கும்,



பால்

பொம்மை

மணி சப்தம்

புத்தகம்

காக்கா

தொலைக்காட்சி

எழுதுகோல்

நாய்குட்டி

வாகனம்

பூனை,

எதற்கும்!

அழுகையை

நிறுத்தாத குழந்தை!



"அம்மா வந்துட்டேன்

செல்லம்"என

அணைத்த நொடியிலேயே

அழுகையின்றி சிரித்தது!

~நம்பிக்கைபாண்டியன்