Wednesday, June 18, 2008

பாசம்!


தாத்தா

பாட்டி

அப்பா

அத்தை

யாருக்கும்,



பால்

பொம்மை

மணி சப்தம்

புத்தகம்

காக்கா

தொலைக்காட்சி

எழுதுகோல்

நாய்குட்டி

வாகனம்

பூனை,

எதற்கும்!

அழுகையை

நிறுத்தாத குழந்தை!



"அம்மா வந்துட்டேன்

செல்லம்"என

அணைத்த நொடியிலேயே

அழுகையின்றி சிரித்தது!

~நம்பிக்கைபாண்டியன்

No comments: