Sunday, September 30, 2007

ஓடிப்போலாமா?

அக்கம் பக்கம் கண்ணில் படும்படி யாருமில்லை என்று தெளிவுபடுத்திக்கொண்டு ,வீட்டிற்கு சற்று தள்ளியே பைக்கை நிறுத்திவிட்டு,செல்வியின் வீட்டிற்குள் நுழைந்தான் மூர்த்தி!

உள்ளே அன்றைய செய்தித்தாள்களை புரட்டிக்கொண்டிருந்தாள்செல்வி
!மூர்த்தியை பார்த்ததும் என்ன செய்வது என்று புரியாமல் அமைதியாக இருந்தாள்!
"என்ன செல்வி! இன்னும் புறப்படலியா நான்தான் நேற்றே சொன்னேன்ல! வேகமா வா உன் அம்மா அப்பா வருவதற்குள் போயிடலாம்!"என்று கெஞ்சும் பார்வையுடன் அழைத்தான்!
"உங்க இஷ்டத்துகெல்லாம் என்னால வரமுடியாது!நம்ம ஒன்னுசேரமுடியும்ங்கிற நம்பிக்கை இப்போ எனக்கு ரொம்ப குறைஞ்சுருச்சு!"
"என்ன மன்னிச்சுருங்க! முதல்ல வீட்டுக்கு போங்க! யாராவது பார்த்தா என்ன தப்பா நினைப்பாங்க!"என்று சொல்லிவிட்டு அவன் முகத்தை பார்க்காமல் ஜன்னலின் பக்கம் திரும்பிக்கொண்டாள்!
"உன்ன எனக்கு நிஜமாவே பிடிக்கலைனு சொல்லு நான் போய்டுறேன்!"என்றான்!
அவள் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள்!

யாரென்றே அறிமுகமாத நம்மை!நம் இருவருக்கும்தான் திருமணம் என்று சொல்லி! நம் பெற்றோர்கள்தானே நம்மை நேரில் அறிமுகப்படுத்தினார்கள்! மூன்று மாதத்திற்கு முன் பெரியோர்கள் முன்னிலையில் வெற்றிலைபாக்கு வைத்து, தட்டு மாற்றிக்கொண்டு நல்லநாள் மூகூர்த்தம்,திருமண மண்டபம் ,திருமண செலவுக்க்கு இரு தரப்பிலும் தேவையான பணஏற்பாடு, போன்ற காரணங்களால் நான்கு மாதங்கள் கழித்து திருமணத்தை வைத்துக்கொள்ளலாம்! என்று சொன்னார்கள்!

எனக்கு தெரியாமல் உங்களிடம் நான் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொன்னது என் பெற்றோர்கள் செய்த தவறு! அதை நம்பி அன்று பெண்ணுக்கு 25 சவரன் நகைபோடுவதாக ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது "பேசியதை விட நான்கு சவரன் குறைவாகத்தான் நகை போடுவோம் இல்லையென்றால் நீங்கள் வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள்" தடாலடியாக பதில் சொன்னது உன் பெற்றோர்களின் தவறு! இவர்களுக்கு இடையில் நாம் மாட்டிகொண்டு முழிக்கிறோம்!" என செல்வியிடம் புலம்பி தவித்தான் மூர்த்தி!

"உங்கள் வீட்டில் நீங்கள் எடுத்துச்சொல்லி சமாதானம் செய்யலாமே என்றாள் செல்வி!"
"சொல்லிவிட்டேன்!செல்வி,எங்கள் வீட்டில் பணத்தாசைக்காக மறுக்கவில்லை! உன் பெற்றோர்கள் பொறுமையாக பேசாமல் எடுத்தெறிந்து பேசும் விதமாக பதில் சொன்ன விதம் பிடிக்கவில்லை! அதனால்தான் இப்பொழுதே இப்படியா? என்று யோசிக்கிறார்கள்,என்ன சமாதானம் சொன்னாலும் ஏற்க மறுக்கிறார்கள்!
உன் அப்பாவிடமும் நான்கு சவரன் நகைக்குரிய செலவை நான் ஏற்றுக்கொள்கிறேன் திருமணத்தை நிறுத்தாதீர்கள் என்று சொல்லி பார்த்துவிட்டேன்! "எங்கள என்ன வக்கத்த குடும்பம்னு நினைச்சுட்டிங்களா!உங்க வாக்கு சுத்தத்திற்கு இவ்வளவு செய்யுறதே போதும்!னு சொல்லுறார்!
இருதரப்பினரையும் இப்போது சமாதனம் செய்வதை விட நாமாக திருமணம் செய்துவிட்டு பிறகு சமாதானம் செய்வது சுலபம்! என்றான்!

அவள் சற்று முன் செய்திதாளில் சில வரதட்சனை கொடுமைசெய்திகளை படித்ததில், அதிலிருந்த ஆண்களை விட மூர்த்தி உயர்ந்தவனாக் தெரிந்தான்!அப்படி என்ன! இவ்வளவு பிரியம் என்மேல் என்று மனதிற்குள் கேட்டுக்கொண்டே அவனை ஆச்சர்யமாய் பார்த்தாள் செல்வி!

அவளின் பார்வையின் அர்த்தன் புரிந்தவன் போல் "உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு செல்வி! பார்த்தவுடன் பிடித்துப்போன உன் இயல்பான முகம்!கடந்த மூன்று மாதத்தில் உன்னுடன் தொலைபேசியில் பேசியபோதும், என் வீட்டிற்கு தெரியாமல் உன் வீட்டிற்கு இரண்டு முறை உன் வீட்டிற்கு வந்த போதும் நீ பேசிய விதமும்,உன் குணமும் பிடித்திருந்தது! "நான்கு சவரன் நகைக்காக நல்ல வாழ்க்கையை இழக்க நான் தயாராக இல்லை!"அதனால்தான் உன் வீட்டில் கொடுக்கும் நகையோ எதுவுமே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை!நீ வந்தால் போதும்!செல்வி!

நகரத்து வாழ்க்கைக்கு என்றால் என் சம்பளம் போதாதுதான்!நம் பகுதிக்கு வாழ்க்கைக்கு என் சம்பளம் அதிகம் தான்! வாழப்போவது நாம் தான் நம் பெற்றோர்கள் அல்ல அவர்களை பிறகு சமாதானப்படுத்தலாம் வா போகலாம் என்று கையை பற்றி இழுத்தான்!
சட்டென்று அவன் கைகளை உதறிவிட்டு உள அறைக்குள் ஓடினாள்!அவன் வாடிய முகத்துடன் வாசலில் வந்து நின்றான்!

உள்ளே சென்றவள் சில நாட்களுக்கு தேவையான ஆடைகளை பையில் எடுத்து வைத்துவிட்டு!"பெற்றோர் பார்த்த மாப்பிள்ளை! பணத்தைவிட என்னைக் நேசிப்பவன் கிடைக்கும் போது என் திருமணத்திற்காகவே எடுத்த நகைகளின் உரிமையை நான் ஏன் விட்டுக்கொடுக்க வேண்டும்" என்று நினைத்தபடியேஅலமாரி சாவியை எடுத்து நகைகளையும் எடுத்து பையில் வைத்துவிட்டு வாசலுக்கு வந்தாள் செல்வி!அது தெரியாமலேயே மனம் மகிழ்ந்து பைக்கை இயக்கினான் மூர்த்தி! அவன் தோள்களை பற்றியபடி அவள் பின்னே அமர்ந்ததும், இணையப்போகும் இரு உள்ளங்களை சுமந்த பைக் உற்சாகமாக ஓடிக்கொண்டிருந்தது!

~(நம்பிக்கைபாண்டியன்)

Monday, September 17, 2007

முதல்நண்பன்(கடவுள்)
தவறிழைக்க
மனம் முயன்று
மறந்து சென்றேன் உன்னை!

தடை கொடுத்து
வழி மாற்றி
சீர் செய்தாய் என்னை!

உன்னால்
மன்னிக்கப்பட்டவன் நான்!
என்னால்
மறக்கமுடியாதவன் நீ!

~நம்பிக்கைபாண்டியன்