Thursday, December 21, 2006

பொய்

"ஆ!..காட்டு,ஆ!..காட்டு!"
"அப்பாக்கு இல்லை, இல்லை சொல்லிரு!"
"காக்கா தூக்கிட்டு போகபோகுது,ச்சூ!..ச்சூ!"

"நிலா பாரு!நிலா பாரு
"நாய்க்கு அப்புறம் தான்!
"மண்டை பூனை வரபோகுது! மியாவ்!..."
"பூச்சாண்டிகிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்!"

"பஸ்ல ,டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்... போவோமா?"
"அம்மா சாக்லேட் வாங்கிதாரேன்!"
"ஊசி, ஊசி போட்ருவேன்"

"தூங்குரப்போ, சாமி வந்து
வயிர தொட்டு பார்க்கும்!
வெறும் வயிரா இருந்தா
கண்ணு ரெண்டையும்
தோண்டிட்டு போய்டும்"என‌

அன்று அன்புடன்
உணவு கொடுக்க
விதம் விதமாய்
பொய் சொன்னாள் அம்மா!

இன்று அன்புடன்
உணவு கொடுக்காமல்‌
முதியோர் இல்லத்தில் சேர்த்ததற்கு!
விதம் விதமாய்
பொய் சொல்லுகிறான் மகன் !

--நம்பிக்கை பாண்டியன்

Sunday, December 10, 2006

பயணம்

அன்று நான்
ந‌டை ப‌ய‌ண‌த்தில்!
நீ! சைக்கிள் பயணத்தில்!

பின்பு நான்
சைக்கிள் பயணத்தில்!
நீ! பைக் பயணத்தில்!

இன்று நான்
பைக் பயணத்தில்!
நீ! கார் பயணத்தில்!

அன்று முத‌ல்
இன்று வ‌ரை!
நாம் இருவ‌ருமே
ந‌ட்பு ப‌ய‌ண‌த்தில்!

~நம்பிக்கைபாண்டியன்

Saturday, December 09, 2006

காதல் குறும்புகள்!
(தேன் கூடு இணைய தளத்தின் போட்டிக்கான படைப்பு(குறும்பு)

உன் விழிகளின்
பார்வை குறும்புகளால் என்னிலும்!
என் பேச்சின்
நகைச்சுவை குறும்புகளால் உன்னிலும்!

ஏற்பட்ட ஈர்ப்பின் விளைவாய்

நம்மில் அரும்பியது காதல்!

எத்தனையோ நாட்கள்
எத்தனையோ விதமான
வார்த்தைக் குறும்புகளால்
ஒருவரை ஒருவர்
வசீகரித்திருக்கிறோம்!
வசை பாடியிருக்கிறோம்!
அத்தனையும் நினைவில்
அழியாமல் நிற்கிறது!

ஒருநாள் நான் உன்னை
"தேவ‌தை" என்று‌ வ‌ர்ணித்துவிட‌!
ம‌றுநாள் வ‌ந்து
"நேற்று என்னை தேவதை என்று சொல்லி
தூங்க‌ விடாம‌ல் செய்து விட்டாய்!"என்று,
நீ மகிழ்ச்சியுட‌ன் சொன்ன‌போது!

"உன்னை அப்ப‌டி தவறாக வ‌ர்ணித்த‌ற்காக‌
நானும்தான் தூங்க‌வில்லை" என்றேன்!
"என்ன‌ உள‌ருகிறாய் "என்று
கோப‌த்துட‌ன் புரியாம‌ல் கேட்டாய்!

"ஆமாம்! நீ ஒன்றும் தேவ‌தை அல்ல‌!
தேவ‌தைகள் சிறகுகள் விரித்தால்தான் அழ‌கு
ஆனால் நீயோ சிரித்தாலே அழ‌கு!

தேவ‌தைக‌ளின் பாத‌ம் பூமியில் படாதாம்!
கடினமான பூமியில் உன் மெல்லிய பாதங்கள்
பதிந்து ந‌டந்து வரும்போதுதானே நீ இன்னும் அழகு!

தேவ‌தைகளின் க‌ண்க‌ள் இமைப்ப‌தில்லையாம்!
அவ்வப்போது மேலும் கீழும் பட படவென
அடித்துக் கொண்டு அதை பார்க்கும் என் இதயத்துடிப்பை
அதிகரிக்கும் உன் இமைப்பார்வை கொள்ளை அழகு!

தேவ‌தைக‌ள் தங்க‌ளின் இத‌ய‌த்தில் பாரபட்சமின்றி
எல்லோரையும் ச‌ம‌மாக‌வே நினைப்பார்க‌ளாம்!
நீ! என்னை, உன் இத‌ய‌த்தில்
காத‌ல் என்னும் அன்பின் உய‌ர‌த்தில் அம‌ர்த்தியிருக்கிறாயே!
அத‌னால்தான் சொன்னேன் நீ தேவ‌தை அல்ல!" என்ற‌தும்!

"போடா!உன் குறும்பு பேச்சால்
இன்றும் என்னை தூங்க‌விடாம‌ல் செய்து விட்டாய்" என்ற‌வ‌ளே!

இன்னொருநாள்


உன் கோபத்தை ரசிப்பதற்காக!
உன்னைப்போல ஒரு முட்டாளை
நான் பார்த்ததே இல்லை! என்று
நான் குறும்பாய் சொன்னபோது!
கோபப்படாமல் சிரித்துக்கொண்டே!



அதனால் தானடா!
உன்னை காதலித்திருக்கிறேன் என்று
குறும்பாக பதில் சொல்லி
உன் புன்னகையை ரசிக்கவைத்தவளே!

மற்றொருநாள்!


சாப்பிடும் பொழுது
"இவ்வளவு கொஞ்சமாக சாப்பிட்டு!
எப்படி உங்களால்
இப்படி குண்டாக இருக்க முடிகிறது"என்று
நான் குறும்பாய் கேட்டதும்,
"பெண்ணாய் பிறந்து பார்!
அப்போது தெரியும்" என்றவளே!


நீ ஆணாகா பிறந்து
என்னை காதலிப்பாயென்றால்!
நான் பெண்ணாய் பிறக்க
சம்மதிக்கிறேன்! என்றதும்
உன் மகிழ்ச்சிக் கண்ணீரால்
குறும்பை மறைத்து
அன்பை நிறைத்தவளே!

எல்லை மீறாத!
ந‌ம் காத‌ல் குறும்புக‌ள்!
விரைவில் எல்லைக‌ள‌ற்ற‌
க‌ல்யாண‌ குறும்புக‌ளாய் மாற‌ட்டும்!
அதை‌யே உல‌க‌ம் பாராட்டும்!

~ந‌ம்பிக்கை பாண்டிய‌ன்

பூவும்! நீயும்!

பெண்ணே !
பேசிக்கொண்டே ஒருநாள
்நடந்து செல்லும் போது
"எத்தனையோபெண்கள் இருக்க
என்னை எப்படி?
உன் காதலியாக
நீ தேர்ந்தெடுத்தாய்!"என்றாய்

"சற்று முன ்ரோஜா
மலர் ஒன்றை வாங்கும்போது!
அங்கிருந்த அழகிய
எத்தனையோ பூக்களில
்ஒன்றை மட்டும்
எப்படி தேர்ந்த்தெடுத்தாய்!" என்றேன்

"என் பார்வைக்கும்!
என் மனதிற்கும் அது
மிகவும் பிடித்திருந்தது!" என்றாய
்"அதே போல்தான்
உன்னையும் எனக்கு!
பிடித்திருந்தது!" என்றேன்!

"ஓ! அப்படியா!
நான் தேர்ந்தெடுக்கும் பூவும்!
நீ தேர்ந்தெடுக்கும் நானும் !
ஒன்றென்றால்! நான்
வெவ்வேறு நாட்களில்,
வெவ்வேறு பூக்களை
தேர்ந்தெடுப்பது போல்!
நீயும் வெவ்வேறு
பெண்களைதேர்ந்தெடுப்பாயா!" என்றாய்!
கேலிப் புன்னகையுடன்!

"ஆம்! பூவை
தேர்ந்தெடுக்கும் நீயும்!
உன்னை தேர்ந்தெடுக்கும்
நானும்!ஒன்றுதான்!
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்!

ஒரு நாளுக்கு
ஒரு பூவை
நீ தேர்ந்தெடுக்கிறாய் !
ஒரு ஜென்மத்திற்கு
ஒரு பெண்ணை
நான் தேர்ந்தெடுக்கிறேன்!

இந்த நாளுக்கு
அந்த பூ! மட்டும் உனக்கு!
இந்த ஜென்மத்திற்கு
நீ! மட்டும் எனக்கு! "என்றதும்

உன் கண்கள்
மகிழ்ச்சியில் மலர்ந்தன!
என் கன்னங்கள
்முத்தத்தால் சிவந்தன!
~நம்பிக்கை பாண்டியன்