Saturday, December 09, 2006

பூவும்! நீயும்!

பெண்ணே !
பேசிக்கொண்டே ஒருநாள
்நடந்து செல்லும் போது
"எத்தனையோபெண்கள் இருக்க
என்னை எப்படி?
உன் காதலியாக
நீ தேர்ந்தெடுத்தாய்!"என்றாய்

"சற்று முன ்ரோஜா
மலர் ஒன்றை வாங்கும்போது!
அங்கிருந்த அழகிய
எத்தனையோ பூக்களில
்ஒன்றை மட்டும்
எப்படி தேர்ந்த்தெடுத்தாய்!" என்றேன்

"என் பார்வைக்கும்!
என் மனதிற்கும் அது
மிகவும் பிடித்திருந்தது!" என்றாய
்"அதே போல்தான்
உன்னையும் எனக்கு!
பிடித்திருந்தது!" என்றேன்!

"ஓ! அப்படியா!
நான் தேர்ந்தெடுக்கும் பூவும்!
நீ தேர்ந்தெடுக்கும் நானும் !
ஒன்றென்றால்! நான்
வெவ்வேறு நாட்களில்,
வெவ்வேறு பூக்களை
தேர்ந்தெடுப்பது போல்!
நீயும் வெவ்வேறு
பெண்களைதேர்ந்தெடுப்பாயா!" என்றாய்!
கேலிப் புன்னகையுடன்!

"ஆம்! பூவை
தேர்ந்தெடுக்கும் நீயும்!
உன்னை தேர்ந்தெடுக்கும்
நானும்!ஒன்றுதான்!
ஆனால் ஒரு சின்ன வித்தியாசம்!

ஒரு நாளுக்கு
ஒரு பூவை
நீ தேர்ந்தெடுக்கிறாய் !
ஒரு ஜென்மத்திற்கு
ஒரு பெண்ணை
நான் தேர்ந்தெடுக்கிறேன்!

இந்த நாளுக்கு
அந்த பூ! மட்டும் உனக்கு!
இந்த ஜென்மத்திற்கு
நீ! மட்டும் எனக்கு! "என்றதும்

உன் கண்கள்
மகிழ்ச்சியில் மலர்ந்தன!
என் கன்னங்கள
்முத்தத்தால் சிவந்தன!
~நம்பிக்கை பாண்டியன்

No comments: