Wednesday, April 11, 2007

ந‌ட்பு கவிதைகள்

1)
உன் கவிதைகளில்
நிறைந்திருக்கும்
அந்தக் காதலி யாரடா? என்ற‌
தோழி உன் கேள்விகளுக்கு
பதில் சொல்வதற்காகவே
விரைவாக தேடுகிறேன்
எங்கோ மறைந்திருக்கும்
என் காதலியை!

2)
என் வாழ்வின்
வளர்ச்சிக்கு நீயும்!
உன் வாழ்வின்
வளர்ச்சிக்கு நானும்
எடுத்துக் கொண்ட!
முயற்சிகளால்தான்
நம்வாழ்வில் நட்பு‌
உயர்ந்திருக்கிறது நண்பனே!

3)
அங்கும் இங்கும்
தேடித்திரிந்து
ஒருத்தியிடம் மட்டுமே
எதிர்பார்க்கிறேன் காதலை!
செல்லும்
இடமெங்கும்
ஒவ்வொருவரிடமும்
எதிர்பார்க்கிறேன் நட்பை!

~நம்பிக்கைபாண்டியன்

No comments: