Monday, July 30, 2007

காதல் நிலை!

அழகின் ஆர்வ‌த்தில்
புரியாத வேகத்தில்
பக்குவமின்றி
பரிமாறிக்கொண்ட‌
அவசரக் காதல்கள்!
மழைக் காலத்துக்
காளான்களாக‌
எளிதில் அழிந்து
மறைகின்றன!

சூழ்நிலை உணர்ந்து
பேசிப் புரிந்து
பொறுமையாக வளர்ந்த
சீரான காதல்கள்!
மலைப் பிரதேசத்து‌
மரங்களாக‌,
உறுதியாய் உயர்ந்து
நிலைக்கின்றன!

~நம்பிக்கைபாண்டிய‌ன


No comments: