Wednesday, October 03, 2007

அற்புத கடிகாரம்!
அவசிய வேலைகளால்
அதிகாலை எழுவதற்கு
அலாரம் வைத்த‌
அன்றைய உறக்கத்தில்!
அலட்சியம் செய்த‌
அத்தனை முறையும்!
அக்கறையாய் ஒலித்து
அன்புடன் எழுப்பியது!
அம்மா எனும்,
அற்புத கடிகாரம்!

~நம்பிக்கைபாண்டியன்


1 comment:

Unknown said...

nice

balmadhu@gmail.com