Sunday, September 21, 2008

ஊருக்கு சென்றவள்!


ஊருக்கு சென்றவள்!

கோலமிடாத
வாசல்!
சுவையற்ற
உணவு!

துவைக்காத
துணிகள்!
துலக்காத
பாத்திரங்கள்!

தூசு படர்ந்த
அறைகள்!
சிதறிக் கிட‌க்கும்
பொருட்கள்!

பசிக்காக குரைக்கும்
வீட்டு நாய்!
நீரின்றி வாடும்
பூச்செடிகள்!
காய்ந்த பூக்களுடன்
கடவுள் புகைப்படங்கள்!

எல்லாம் உணர்த்துகின்றன
ஊருக்குச் சென்ற‌
அம்மாவின் அருமையை!

- நம்பிக்கைபாண்டியன்

2 comments:

manjoorraja said...

அம்மாவின் அருமையே அருமை.

மனைவி இல்லாமல் போனாலும் அதெ பிரச்சினைதான்

நல்ல கவிதை பாண்டி.

சுடர்மணி...(கொஞ்சம் நல்லவன்) said...

Nalla ezuthuringa...

Melum Valara Vazthukkal....

www.nallasudar.blogspot.com