Friday, March 23, 2012

கவிதைகளாகவும் இருக்கலாம்! 3 - படக்கவிதைகள்

வலியுணராதவர்கள்
நள்ளிரவில் 
அழும் குழந்தையை
தொந்தரவாக 
நினைக்கும் தம்பதிகள்
உணர்ந்திருக்க வாய்ப்பில்லை
குழந்தையற்றவர்களின் 
மனவலியை!

நட்பு
பத்திரிக்கை 
கொடுக்கப்படாத 
திருமணத்திற்கும்
நேரில் சென்று
வாழ்த்தும் குணம் 
நட்பில் மட்டுமே
சாத்தியமாகிறது!

ஏக்கம்
தினமும்
எங்கள் ஊரைக்

கடந்துதான் செல்கின்றன!
ஒருநாள் கூட‌
நின்றதேயில்லை
இந்த விமானங்கள்!



 


14 comments:

தீபிகா(Theepika) said...

படங்களும் வரிகளும் அருமை. சிந்திக்க வைக்கின்ற வார்த்தைகள்.

Unknown said...

மூன்று கவிதைகளின் கருவும் அழகு.. நட்பு கவிதை படத்தோடு என்னை மிகவும் கவர்ந்தது சகோ:)

ஹேமா said...

ஆகா....மூன்றுமே அருமை.ஏக்கம்,நட்பின் பெருமை,மூன்றாவது அட்டகாசம் !

இராஜராஜேஸ்வரி said...

படங்களும், பகிர்வும் நிறைவாய் மனம் கவர்ந்தன.. பாராட்டுக்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

அழகு

பாலா said...

மூன்று கவிதைகளுமே மிக அருமை

அருணா செல்வம் said...

எண்ணங்களின் அழகு கவிதையில் தெரிகிறது. வாழ்த்துக்கள்.

சசிகலா said...

நட்பின் வரிகள் அருமை .

வை.கோபாலகிருஷ்ணன் said...

வெகு அழகான சிந்திக்க வைக்கும் கவிதைகள். பாராட்டுக்கள்.

Unknown said...

படங்களும் உரிய பாடல்களும்
அருமை! அருமை!
நம்பிக்கைக்கு பெருமை!பெருமை!

புலவர் சா இராமாநுசம்

மாலதி said...

தினமும்
எங்கள் ஊரைக்
கடந்துதான் செல்கின்றன!
ஒருநாள் கூட‌
நின்றதேயில்லை
இந்த விமானங்கள்!//அருமை! அருமை!

நம்பிக்கைபாண்டியன் said...

கருத்தளித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்!

செய்தாலி said...

ம்ம்ம் எல்லாம் அருமை

Yaathoramani.blogspot.com said...

நல்ல கவிதைகளாகவே இருக்கின்றன
பதிவாக்கித் தந்தமைக்கு வாழ்த்துக்கள்