Friday, April 27, 2012

என் ரயிலில் நீ! - காதல் கவிதைகள்


சிறுவனாய் பயணித்த
முதல் ரயில் பயணத்தின்
உற்சாகத்தை
மீண்டும் உணர்ந்தேன்
உன்னுடனான
முதல் ரயில்பயணத்தில்...

******************************


சில நேரங்களில்
அருகருகே அமர
இடம் கிடைத்தாலும்
எதிரே அமர்ந்து
பயணிப்பதையே விரும்புகிறேன்
உன்னை பார்த்துக்கொண்டே
பயணிப்பதால்!

*********************************
உன்னை வழியனுப்ப
வரும்போதெல்லாம்
உனக்கான ரயிலில்
நீ விடைபெற்றுச்
சென்ற பின்னும்
ரயில் நிலையத்தில்
சிறிதுநேரம் அமர்ந்துவிட்டே
வீடு திரும்புகிறேன்
அங்கு நிறைந்திருக்கும்
உன் நினைவுகளை
சுவாசிப்பதால்!


*********************************

 


 

14 comments:

பாலா said...

செம ரொமான்டிக் கவிதைகள் நண்பரே.

வை.கோபாலகிருஷ்ணன் said...

சுகமான அனுபவத்துடன் கூடிய அழகான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மூன்று கவிதைகளின் “எண்ணங்களிலும் அழகு” உள்ளது. ;)))))

அருணா செல்வம் said...

அருமையான கவிதைகள். வாழ்த்துக்கள் நண்பரே.

சசிகலா said...

நினைவுகளை சுவாசிப்பதால் என்ன அழகான வரிகள் மிகவும் அற்ப்புதம் .

MARI The Great said...

அருமை ...!

ஹேமா said...

மூன்றுமே அருமை என்றாலும் அன்பைப் பிரித்திழுத்துபோகும் புகையிரதம்...கொடுமை !

ராஜி said...

கவிதையும், கவிதைக்க்கேற்ற படங்களும் வெகு அருமை. பகிர்வுக்கு நன்றி

Athisaya said...

உன்னை வழியனுப்ப
வரும்போதெல்லாம்
உனக்கான ரயிலில்
நீ விடைபெற்றுச்
சென்ற பின்னும்
ரயில் நிலையத்தில்
சிறிதுநேரம் அமர்ந்துவிட்டே
வீடு திரும்புகிறேன்
அங்கு நிறைந்திருக்கும்
உன் நினைவுகளை
சுவாசிப்பதால்

அனைவருக்கும் அன்பு  said...

காதலே சுவாசமானபின் சுவாசிக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம் ?.............அருமையான உணர்வுகளின் வெளிபாடு ..............வலைசரம மூலம் நீங்கள் அறிமுகம் நட்பால் இணைவோம்

thalasuresh vet said...

love is pain

Unknown said...

மிகவும் அழகு...

Unknown said...

மிகவும் அழகு...

Unknown said...

மிகவும் அழகு...