Monday, November 05, 2012

வீடு! - படக்கவிதை
















வயல்களை அழித்து
வீட்டடி நிலமாக்கி
!
 ஆறுகளை தோண்டி
வீடு கட்ட மணல் அள்ளி!

மலைகளை உடைத்து
ஜல்லி கற்களாக்கி!

நிலங்களை குடைந்து
சுண்ணாம்பில் சிமிண்டெடுத்து!

சுரங்கங்களில் சுரண்டிய‌
தாதுக்களில் கம்பியெடுத்து!

மரங்களை கொன்று!
நிலை கதவு, ஜன்னல் செய்து!

இயற்கை வளங்களை
கொள்ளையடித்து உருவாகிய வீட்டை

சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது  "என் வீடு" என...!

 

             

6 comments:

சிகரம் பாரதி said...

Arumai nanbare. Alagaana kavidhai.pls visit my site: http://newsigaram.blogspot.com

ராஜி said...

சிறிதும் தயக்கமின்றி
கூறிக்கொள்கிறேன்
இது "என் வீடு" என...!
>>
இனி கொஞ்ச வெட்கப்படத்தான் வேணுமோ?!

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவில் யோசிக்க வேண்டிய கருத்து தான்...

சசிகலா said...

சிந்திக்க வேண்டிய வரிகள்.

அ. வேல்முருகன் said...

அடிப்படை தேவையில்
அதற்கொரு இடமுண்டு
ஆயினும் அவரவர் - வீடு
குடிசையோ கோபுரமோ
குடிபெருமை சொல்லுது

ஆனால்
குடிசைகள்தான் இங்கு அதிகம்

ஹேமா said...

எதுவுமே எமதில்லை என்பது சூசகமாகப் புலப்படுகிறது.யோசிக்க வைக்கும் கவிதை !