Sunday, October 29, 2006

தந்தை!

என் சிந்தையில்
மறைந்திருக்கும் தந்தையே !

நீங்கள் உழைத்து கொடுத்த
உணவால்தான்
என் உடல் வளர்ந்தது !
உணர்ந்து செலுத்திய
அக்கறையால்தான்
என் உள்ளம் வளர்ந்தது !!

எங்கள் நலனுக்காக
நீங்கள் பட்ட
சிரமங்களின் முன்னால்
சிகரங்கள் உயரம் குறைந்தவை !

எத்தனையோ தீபாவளிக்கு
எங்களுக்கு மட்டும்
புது ஆடை உடுத்தி அழகு பார்த்தவரே !

கோவிலில் உங்கள்
பிரார்த்தனை முழுவதும்
எங்களுக்காகவே இருக்கும் !

நீங்கள் திட்டுவதெல்லாம்
எங்கள் பொறுப்பை
உணர்த்துவதற்க்குதான்!
நாங்கள் தான் அதை
தவறாக நினைக்கிறோம்!
என் முன்னால்திட்டினாலும்
மற்றவர்கள் முன்னால்
விட்டுக் கொடுக்காமல் பேசுபவரே !

ஒவ்வொரு முறை
சாப்பிடும் போதும்
அம்மாவிடம் ,அவன் சாப்பிட்டனா?
என்று அன்பு விசாரிப்பவரே !

நீங்கள் எனக்கு,நீச்சல்
தண்ணீரில் மட்டும்
கற்றுக் கொடுக்கவில்லை
வாழ்க்கையிலும்தான் !

எப்படி வாழவேண்டும்?
என்ற கேள்வி
எனக்குள் எழாத வண்ணம் !
இப்படித்தான் வாழவேண்டும் !
என்று வாழ்ந்து கொண்டிருப்பவரே !

உழைப்புக்கும், சிக்கனத்திற்க்கும்!
பொறுமைக்கும், தூய்மைக்கும்
முன் மாதிரியாய் வேறு யாரையும்
நான் பார்க்கத் தேவை இல்லை !
உங்களை பார்த்தாலே போதும் !

உங்கள் சொற்களை
நான் மீறி இருக்கலாம் !
நீங்கள் காட்டிய
நல்ல வழியில் இருந்து
கண்டிப்பாக மாறமாட்டேன் !

உங்களை நினைத்து
நான் பெருமைப்படும்படி
நீங்கள் வாழ்கிறீர்கள் !
என்னை நினைத்து
நீங்கள் பெருமைப்படும்படி
நிச்சயமாய் நானும் வாழ்வேன் !

~நம்பிக்கை பாண்டியன்

No comments: