Thursday, December 21, 2006

பொய்

"ஆ!..காட்டு,ஆ!..காட்டு!"
"அப்பாக்கு இல்லை, இல்லை சொல்லிரு!"
"காக்கா தூக்கிட்டு போகபோகுது,ச்சூ!..ச்சூ!"

"நிலா பாரு!நிலா பாரு
"நாய்க்கு அப்புறம் தான்!
"மண்டை பூனை வரபோகுது! மியாவ்!..."
"பூச்சாண்டிகிட்ட பிடிச்சு கொடுத்துருவேன்!"

"பஸ்ல ,டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்... போவோமா?"
"அம்மா சாக்லேட் வாங்கிதாரேன்!"
"ஊசி, ஊசி போட்ருவேன்"

"தூங்குரப்போ, சாமி வந்து
வயிர தொட்டு பார்க்கும்!
வெறும் வயிரா இருந்தா
கண்ணு ரெண்டையும்
தோண்டிட்டு போய்டும்"என‌

அன்று அன்புடன்
உணவு கொடுக்க
விதம் விதமாய்
பொய் சொன்னாள் அம்மா!

இன்று அன்புடன்
உணவு கொடுக்காமல்‌
முதியோர் இல்லத்தில் சேர்த்ததற்கு!
விதம் விதமாய்
பொய் சொல்லுகிறான் மகன் !

--நம்பிக்கை பாண்டியன்

2 comments:

Anonymous said...

//எண்ணங்கள் அழகானால்...//
அருமையான வார்த்தைகள்!
வாழ்கையின் சம்பவங்களிலும்,அடுத்தவ்ர் பேச்சிலும்
பாடம் கற்றுக்கொள்ளலாம்.
'அம்மாவின் பொய்கள்' மனம்வலிக்கும்
நிதர்சன உண்மை.நல்ல பதிவு
நானானி

Anonymous said...

//அன்று அன்புடன்
உணவு கொடுக்க
விதம் விதமாய்
பொய் சொன்னாள் அம்மா!

இன்று அன்புடன்
உணவு கொடுக்காமல்‌
முதியோர் இல்லத்தில் சேர்த்ததற்கு!
விதம் விதமாய்
பொய் சொல்லுகிறான் மகன் !//
சிறிது கசப்பாக இருந்தாலும் உண்மையை வெளிச்சம் போட்டுள்ளீர்கள்