தந்தை!
என் சிந்தையில்
மறைந்திருக்கும் தந்தையே !
நீங்கள் உழைத்து கொடுத்த
உணவால்தான்
என் உடல் வளர்ந்தது !
உணர்ந்து செலுத்திய
அக்கறையால்தான்
என் உள்ளம் வளர்ந்தது !!
எங்கள் நலனுக்காக
நீங்கள் பட்ட
சிரமங்களின் முன்னால்
சிகரங்கள் உயரம் குறைந்தவை !
எத்தனையோ தீபாவளிக்கு
எங்களுக்கு மட்டும்
புது ஆடை உடுத்தி அழகு பார்த்தவரே !
கோவிலில் உங்கள்
பிரார்த்தனை முழுவதும்
எங்களுக்காகவே இருக்கும் !
நீங்கள் திட்டுவதெல்லாம்
எங்கள் பொறுப்பை
உணர்த்துவதற்க்குதான்!
நாங்கள் தான் அதை
தவறாக நினைக்கிறோம்!
என் முன்னால்திட்டினாலும்
மற்றவர்கள் முன்னால்
விட்டுக் கொடுக்காமல் பேசுபவரே !
ஒவ்வொரு முறை
சாப்பிடும் போதும்
அம்மாவிடம் ,அவன் சாப்பிட்டனா?
என்று அன்பு விசாரிப்பவரே !
நீங்கள் எனக்கு,நீச்சல்
தண்ணீரில் மட்டும்
கற்றுக் கொடுக்கவில்லை
வாழ்க்கையிலும்தான் !
எப்படி வாழவேண்டும்?
என்ற கேள்வி
எனக்குள் எழாத வண்ணம் !
இப்படித்தான் வாழவேண்டும் !
என்று வாழ்ந்து கொண்டிருப்பவரே !
உழைப்புக்கும், சிக்கனத்திற்க்கும்!
பொறுமைக்கும், தூய்மைக்கும்
முன் மாதிரியாய் வேறு யாரையும்
நான் பார்க்கத் தேவை இல்லை !
உங்களை பார்த்தாலே போதும் !
உங்கள் சொற்களை
நான் மீறி இருக்கலாம் !
நீங்கள் காட்டிய
நல்ல வழியில் இருந்து
கண்டிப்பாக மாறமாட்டேன் !
உங்களை நினைத்து
நான் பெருமைப்படும்படி
நீங்கள் வாழ்கிறீர்கள் !
என்னை நினைத்து
நீங்கள் பெருமைப்படும்படி
நிச்சயமாய் நானும் வாழ்வேன் !
~நம்பிக்கை பாண்டியன்
Sunday, October 29, 2006
Friday, October 27, 2006
நீதானே அம்மா!
அன்பை
எனக்கு அறிமுகப்படுத்தி!
இன்றுவரை
அளவின்றி அளிப்பவள்
நீதானே அம்மா!
என் தேவைகளை
பூர்த்தி செய்வதற்க்காக!
உன் தேவைகளை
குறைத்துக் கொண்டவள்!
நீதானே அம்மா!
பொது நலத்திலும்!
சுயநலத்தைக் காட்டும்!
சிலரைப்போல இல்லாமல்!
சுயநலத்திலும் சிறிது
பொதுநலத்தைப் பார்ப்பவள்
நீதானே அம்மா!
சில நாட்கள்
நீ ஊரில் இல்லாவிட்டால்!
உருமாறிப்போகும் நம் வீட்டை!
என்றும் அழகுபடுத்துபவள்
நீதானே அம்மா!
உனக்கு கொடுக்காமல்
நான் எவ்வளவோ சாப்பிட்டிருந்தாலும்!
எனக்கு எடுத்து வைக்காமல்!
எதுவும் சாப்பிடாதவள்
நீதானே அம்மா!
என் உடலில் ஏற்ப்படும்
காயத்தின் வலிகளை!
உன் மனதில் உணர்பவள்
நீதானே அம்மா!
என்னதான் சண்டையிட்டாலும்
சாப்பிடும் நேரத்தில்!
சமாதானத்திற்க்கு வருபவள்
நீதானே அம்மா!
சமைக்கும்
அனைத்து உணவிலும்,
அன்பையும் கலந்து! அதன்
சுவையை அதிகரிப்பவள்
நீதானே அம்மா!
அப்பாவின் உழைப்பையும்!
வீட்டின் நிர்வாகத்தையும்!
சிக்கனத்துடன் சிறப்பாக
வழி நடத்திச் செல்பவள்!
நீதானே அம்மா!
சிறுபிள்ளைத் தனமாக
தவறுகள் செய்தால்!
பிறரைப் போல தண்டிக்காமல்!
சரியானதைச் சொல்லி கண்டித்து!
அழுது நடித்தால்!
அதையும் மன்னிப்பவள்
நீதானே அம்மா!
"ஒரு குடும்பம்
அழிந்து போவதற்கு!
யார் வேண்டுமானலும்
காரணமாக இருக்கலாம்!
நன்றாக இருப்பதற்ககு
ஒரு பெண்தான் காரணமாக இருப்பாள்"!
என்ற உலக கருத்தின்படி!
நம் குடும்பத்தின் நலத்திற்கு
அது நீதானே அம்மா!
இன்னும் பல
ஜென்மங்கள் இருக்குமென்றால்!
அதிலும் நீயே என் தாயாக
வேண்டுமென! கேட்டு! கடவுளிடம்
தொந்தரவு செய்யா மாட்டேன் அம்மா!
இந்த ஜென்மத்தில்!
நான் பெற்ற நன்மைகள்!
வரும் ஜென்மங்களில்
இன்னும் சிலருக்கு !
கிடைக்கட்டும் அம்மா
~நம்பிக்கை பாண்டியன்
Wednesday, October 18, 2006
காத்திருப்பு!
கவிதை வடிவில் குட்டி கதை,
(திருமணத்திற்க்கு காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் நிலை)
1)
குடி போதையில்
வீடு திரும்பாத அப்பா
கட்டுப்பாடின்றி!
காதலியுடன்
ஊர் சுற்றும் தம்பி!
தொலைக்காட்சி நாடகங்களிலும்!
ஊர்க்கதை பேசுவதிலும்
மூழ்கிப் போன அம்மா!
இவர்கள் சொல்கிறார்கள்
நான் அடக்கமாக
இருக்க வேண்டுமாம்!
கோபத்துடன் கொஞ்சம்
சிரிப்பும் வருகிறது!
பருவங்கள் தவறுவதால்
தனிமையை தவிர்க்கிறேன்!
கனவுகளை சொல்ல
வழியின்றி தவிக்கிறேன்!
அம்மாவிடம் சொன்னால்
ஆவேசமாய் திட்டுவாள்!
தோழியிடம் சொன்னால்
ஏளனமாய் சிரிப்பாள்!
இறைவா!
கல்யாணத்திற்குப் பிறகுதான்!
காதலும்! காமமும்!
உணர்வுக்கு வருமென்று!
எல்லோரையும் படைத்திருந்தாள்
நிறைய பேரின் வாழ்க்கை!
நிம்மதியாக இருந்திருக்குமே!
தப்பிக்கவும் வழியில்லை!
தவறு செய்யவும் மனமில்லை!
எப்போது கிடைக்கும் மணமாலை!
அப்போதுதான் இதில் விடுதலை!
தகுதியானவர்களுக்கு
தகுதியானது கிடைக்கும்!
என்ற நம்பிக்கையில்!
இன்னும் காத்திருக்கிறேன்!
என்னைக் கரம் பிடிக்கும்
நல்ல கணவனுக்காக!
(அவளின் நல்ல மனம் போலவே அவளுக்கு நல்ல கணவன் கிடைத்தான்!. திருமணமாகி பல வருடங்களுக்குப் பின்னாலும்! மாறாத அன்புடன்! அவன் தன் மனைவிக்காக! எழுதிய கவிதை.)
அன்பு
கிடைக்கும்போது !
அதில் என் அன்னையை
உணர்ந்தேன் !
அக்கறை
கிடைக்கும்போது!
அதில் என் தந்தையை
உணர்ந்தேன்
அறிவு
கிடைக்கும்போது !
அதில் என் ஆசானை
உணர்ந்தேன்!
என் கவலைகள்
தீரும்போது! அதில்
கடவுளின் அருளை
உணர்ந்தேன்!
உற்சாகம்
கிடைக்கும் போது !
அதில் என் நட்பை
உணர்ந்தேன்!
இவை அனைத்தும்
ஒன்றாய் சேர்ந்து
கிடைக்கும் போது
என் மனைவியே!
அதில் உன்னை
உணர்ந்தேன்!
(அவன் மேல் குறையாத அன்பு கொண்ட அவள்! தன் கணவனுக்காக சொன்ன கவிதை)
ஒவ்வொரு
காத்திருப்பிலும்!
ஒரு அர்த்தம்
இருக்குமென்று!
புத்தகங்களில் படித்தபோது!
அதன் உண்மையை
உணரவில்லை!
உன்னை கணவனாக
அடைந்தபின்தான்!
தேடி வந்த
காதலை எல்லாம்!
மறுத்துக் காத்திருந்ததன்
அர்த்தத்தை உணர்ந்தேன்!
(இறுதிக்காலம் வரை இதே அன்புடன் வாழ்ந்தார்கள்)
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
கவிதை வடிவில் குட்டி கதை,
(திருமணத்திற்க்கு காத்திருக்கும் ஒரு முதிர்கன்னியின் நிலை)
1)
குடி போதையில்
வீடு திரும்பாத அப்பா
கட்டுப்பாடின்றி!
காதலியுடன்
ஊர் சுற்றும் தம்பி!
தொலைக்காட்சி நாடகங்களிலும்!
ஊர்க்கதை பேசுவதிலும்
மூழ்கிப் போன அம்மா!
இவர்கள் சொல்கிறார்கள்
நான் அடக்கமாக
இருக்க வேண்டுமாம்!
கோபத்துடன் கொஞ்சம்
சிரிப்பும் வருகிறது!
பருவங்கள் தவறுவதால்
தனிமையை தவிர்க்கிறேன்!
கனவுகளை சொல்ல
வழியின்றி தவிக்கிறேன்!
அம்மாவிடம் சொன்னால்
ஆவேசமாய் திட்டுவாள்!
தோழியிடம் சொன்னால்
ஏளனமாய் சிரிப்பாள்!
இறைவா!
கல்யாணத்திற்குப் பிறகுதான்!
காதலும்! காமமும்!
உணர்வுக்கு வருமென்று!
எல்லோரையும் படைத்திருந்தாள்
நிறைய பேரின் வாழ்க்கை!
நிம்மதியாக இருந்திருக்குமே!
தப்பிக்கவும் வழியில்லை!
தவறு செய்யவும் மனமில்லை!
எப்போது கிடைக்கும் மணமாலை!
அப்போதுதான் இதில் விடுதலை!
தகுதியானவர்களுக்கு
தகுதியானது கிடைக்கும்!
என்ற நம்பிக்கையில்!
இன்னும் காத்திருக்கிறேன்!
என்னைக் கரம் பிடிக்கும்
நல்ல கணவனுக்காக!
(அவளின் நல்ல மனம் போலவே அவளுக்கு நல்ல கணவன் கிடைத்தான்!. திருமணமாகி பல வருடங்களுக்குப் பின்னாலும்! மாறாத அன்புடன்! அவன் தன் மனைவிக்காக! எழுதிய கவிதை.)
அன்பு
கிடைக்கும்போது !
அதில் என் அன்னையை
உணர்ந்தேன் !
அக்கறை
கிடைக்கும்போது!
அதில் என் தந்தையை
உணர்ந்தேன்
அறிவு
கிடைக்கும்போது !
அதில் என் ஆசானை
உணர்ந்தேன்!
என் கவலைகள்
தீரும்போது! அதில்
கடவுளின் அருளை
உணர்ந்தேன்!
உற்சாகம்
கிடைக்கும் போது !
அதில் என் நட்பை
உணர்ந்தேன்!
இவை அனைத்தும்
ஒன்றாய் சேர்ந்து
கிடைக்கும் போது
என் மனைவியே!
அதில் உன்னை
உணர்ந்தேன்!
(அவன் மேல் குறையாத அன்பு கொண்ட அவள்! தன் கணவனுக்காக சொன்ன கவிதை)
ஒவ்வொரு
காத்திருப்பிலும்!
ஒரு அர்த்தம்
இருக்குமென்று!
புத்தகங்களில் படித்தபோது!
அதன் உண்மையை
உணரவில்லை!
உன்னை கணவனாக
அடைந்தபின்தான்!
தேடி வந்த
காதலை எல்லாம்!
மறுத்துக் காத்திருந்ததன்
அர்த்தத்தை உணர்ந்தேன்!
(இறுதிக்காலம் வரை இதே அன்புடன் வாழ்ந்தார்கள்)
நட்புடன்
நம்பிக்கைபாண்டியன்
Subscribe to:
Posts (Atom)