Friday, January 25, 2008



பலன்!

தவறென்று
நினைத்து
தள்ளிவைத்த ஆசைகள்!

நல்லவன்(ள்)
என்று சொல்லி
நழுவவிட்ட வாய்ப்புகள்!

பின்விளைவுகள்
யோசித்து
விலகிவந்த சூழ்நிலைகள்!

கடவுளுக்கு
பயந்து
கடைபிடித்த கட்டுப்பாடுகள்!

அத்தனையும் சேர்ந்து
அற்புதங்கள் உணர்த்தின!
அன்பு கலந்த‌
இல்லற இரவுகளில்!

~நம்பிக்கைபாண்டியன்!

No comments: