Thursday, January 10, 2008

சில‌ பூக்கள்
அழகிற்காக
வாங்கப்படுகின்றன!

சில பூக்கள்
ம()ணத்திற்காக
‌வாங்கப்படுகின்றன!

இரண்டுமே இல்லாமல்
வாங்குபவர் யாருமற்று
வாடிக்கொண்டிருக்கின்றன‌
சில முதிர்பூக்கள்!

இந்தப்பூக்கள்

அழும் சப்தம்
யாருக்கும் கேட்பதில்லை!
அவைகள்
மெளனமாகவே அழுகின்றன!

~நம்பிக்கைபாண்டியன்

(நண்பர் சிறில் அலெக்ஸ் நடத்தும் "நச்"கவிதை போட்டி"க்கு எழுதியது) http://cyrilalex.com/?p=365

4 comments:

தமிழ் said...

வாழ்த்துக்கள்

கவிதை நன்றாக இருக்கிறது

cheena (சீனா) said...

முதிர்பூக்களும் ஒரு நாள் வாங்கப்படும் - என்ன செய்வது காலம் கடந்த பின். ஆதங்கம்.

சிந்தனை அருமை - அழகான வரிகள். நன்று

இனிய தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்.

நம்பிக்கைபாண்டியன் said...

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க!திகழ்மிளிர்!

உங்களுக்கும் என் தமிழர் திருநாள் வாழ்த்துக்க‌ள் சீனா அவர்களே! தாங்கள் மதுரையில் இருப்பதை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி!

cheena (சீனா) said...

பாண்டியன் - மதுரையா - நன்று

என் வீடு :

http://cheenakay.blogspot.com
http://padiththathilpidiththathu.blogspot.com

நேரமிருப்பின் வரலாமே