Saturday, October 15, 2011

ஹைக்கூ...! -படக்கவிதை

1

கடலில் கலந்த
நதிகளும், மழைகளும்,
உப்புச்சுவை பிடிக்காமல்
வெளியேறத்துடிக்கின்றன! அலைகளாக...

2

நொடிகளில் 
தீர்மானிக்கப்படுகிறது வாழ்க்கை! விபத்து...


3

மழையில் நனைந்ததால்
உடல்நிலை சரியில்லை
பிரேக்கடிக்க தாமதிக்கிறது டயர்...






11 comments:

மாலதி said...

அட எவ்வளவு இரத்தின சுருக்கமாக சிறந்த படைப்பு பாராட்டுகள்

SURYAJEEVA said...

கடலில் கலந்தநதிகளும், மழைகளும்,உப்புச்சுவை பிடிக்காமல்வெளியேறத்துடிக்கின்றன! அலைகளாக...

பிடிக்காமல் வெளியேறி விடுகிறது ஆவியாக

SURYAJEEVA said...

follow gadget இணைக்கவும்

சாகம்பரி said...

கவிதை ஒரு தேக்கரண்டி தேனின் சுவை தருகிறது.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகழகான சிந்திக்கத்தூண்டிடும் சிறந்த சிறிய வரிகளுடன் .... ஹைக்கூ. vgk

நம்பிக்கைபாண்டியன் said...

மாலதி, vgk, சாகம்பரி, suryajeeva , வருகை தந்ததற்கு நன்றி!

நம்பிக்கைபாண்டியன் said...

suryajeeva

(பிடிக்காமல் வெளியேறி விடுகிறது ஆவியாக..)
ஐ.. நல்லாருக்கு!

follow gadget இணைக்கவும்!

வலைபதிவு பற்றிய அறிவு எனக்கு மிக குறைவு! இனிமேல் தான் கற்றுக்கொள்ள வேண்டும், முயற்சி செய்கிறேன். (மின்னஞ்சலில் கேட்கிறேன்)

மகேந்திரன் said...

அருமையான படக் கவிதைகள் நண்பரே.

ஹேமா said...

பாண்டியன்...முதலாவது மிகவும் பிடித்திருக்கிறது !

நம்பிக்கைபாண்டியன் said...

மகந்திரன்,

ஹேமா.

தங்களின் நற்கருத்துக்களுக்கு நன்றி!

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

மூன்று குட்டி கவிதையும் அருமை.
வாழ்த்துக்கள்! :)