Tuesday, May 15, 2012

குழப்ப கவிதைகள்!

நிறைய பேரின்
மனதில் இருக்கும்!
நிறைய பேரில்
ஒருவராய் இருப்பது
நட்பு!
ஒருவர் மனதில்
மட்டும் இருக்கும்!
ஒருவராய் இருப்பது
காதல்!


********************

எழுதுவதெல்லாம்
அனுபவமென்றால்
எல்லா மனிதர்களும்
கவிஞர்களே!

எழுதுவதெல்லாம்
கற்பனையென்றால்
எந்தக்கவிஞனும்
மனிதனல்ல! 


மனிதர்களாய் இருக்கும்
கவிஞர்களைப் போல‌
அனுபவமாய் இருக்கும்
கற்பனையே கவிதை!


**********************

பெண்களை
புரிந்துகொள்ள முடியாது
என்ற உண்மையை
புரிந்து கொண்டவர்கள் தான்!
பெண்களை!
உண்மையிலேயே!
புரிந்து கொண்டவர்கள்


            




2 comments:

தீபிகா(Theepika) said...

சிந்திக்க வைக்கும் நறுக்குகள்.

அருணா செல்வம் said...

“குழப்ப கவிதைகள்” - உங்களின் அழகான ஆழமான எண்ணங்களைப் பிரதிபலிக்கிறது. வாழ்த்துக்கள்.