Thursday, July 10, 2008

விருந்தோம்பல்

விருந்தோம்பல்
"இது எனக்குத்தான்,
அது என்னுடயது" என‌
எதற்கும்
எப்போதும்
சண்டையிடும்
சகோதரர்கள் கூட!
வீட்டிற்கு வரும்
விருந்தாளியிடம் மட்டும்!
விருப்பத்துடனே
விட்டுகொடுக்கிறார்கள்!






~நம்பிக்கைபாண்டியன்

2 comments:

இன்பா (எ) ச.சிவானந்தம் said...

என் வலைப்பூவைப் பார்த்துப் பாராட்டி பின்னூட்டம் அனுப்பிய தங்களுக்கு மனமார்ந்த நன்றி. தங்கள் வலைப்பதிவைக் கண்டேன். காதல், நட்பு, வாழ்க்கை என்று அனைத்து உறவுகளையும், உணர்வுகளையும் சிறு சிறு சம்பவங்களினூடே அழகான வரிகளால் வடிக்கப்பட்டுள்ள தங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. தங்கள் கவிதைப் பயணம் தொடர புதிய நட்பின் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...

இவன்,

இன்பா (எ) ச.சிவானந்தம்.
anbudaninbaa.blogspot.com

நம்பிக்கைபாண்டியன் said...

நன்றி இன்பா! தங்கள் நட்புக்கு நன்றி!!