(கதைக்கு காலில்லை என்ற தத்துவத்தின் அடைப்படையில் படிக்கவும்)
2007 ல் நான் பிறந்தபோது இருந்ததைவிட இந்த 45 வருடத்தில் உலகம் பல மாற்றங்களை கண்டிருந்தது! இந்தியா உட்பட பலநாடுகள் வல்லரசாக மாறியிருந்தது எல்லோரும் வீடுகளிலேயே இருந்தனர்!
எல்லோரிடைய வீட்டிலும் சுவற்றில் ஒட்டிவிடும் அளவிலான மெல்லிய திரையும் அதற்குள்ளாகவே 8000ஜி.பி, மைக்ரோ மெமரி கார்டும் கொண்ட கம்யூட்டர்கள் இருந்தன, காற்று உள்ள இடமெங்கும் இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும், வீட்டில் இருந்துகொண்டேதான் எல்லாக் குழந்தைகளும் படித்தன! தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு சென்றன! அனைத்து அலுவலக பணிகளும் வீட்டில் இருந்தபடியே நடந்தன! மிகவும் அவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும்!குடும்பத்திற்குள் பிரச்சனைகளும் அன்பும் அதிகரித்தன! பத்துக்கு பத்து அடி கொண்ட அறைதான் 1000ம் பேர் வேலை பார்க்கும் ஒரு நிறுவனத்தின் அலுவலகம்!
உங்கள் வீட்டு வாசலிலேயே வந்து அழைத்துச்செல்லும் கால் விமானங்கள் வாடகைக்கு கிடைத்தன
816 வது மாடியில் இருக்கும் ஒரு பெண் இன்டர்நெட்டில் ஒரு காபி ஆர்டர் செய்ததும் அடுத்த அரைமணி நேரத்தில் ஹெலிகாப்டரில் கொண்டு வந்து டோர் டெலிவரி செய்யப்பட்டது! நடமாடும் மொபைல் விமான கோவில்களும் ,சர்ச்சுகளும், மசூதிகளும், அதிகரித்தன!ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் உடலில் பொருத்த டெஸ்ட் டியூப் இதயமும் தயாரிக்கும் கடைகள் ஒவ்வொரு தெருவிலும் தொடங்கப்பட்டன!
ஒரு மாத்திரை சாப்பிட்டால் 10 நாட்களுக்கு பசிக்காத அளவுக்கு தேவையான கலோரி சக்திகள் கொண்ட மாத்திரைகளும் கண்டிபிடிக்கப்பட்டிருந்தன,
எத்தனையோ பிரம்மிக்கத்தக்க மாற்றங்களில் மிக முக்கியமானது சாதரணமாக இருந்த எனது கிராமத்து பள்ளி பருவத்து நண்பன் அரங்கநாதனின் நிறுவனம் நாட்டிலேயே கடந்த 7 ஆண்டுகளாக அதிக லாபம் ஈட்டும் நிறுவனமாக உள்ளது, ஒவ்வொரு வருடமும் இந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு 27% உயருகிறது!இவனுடன் கூட்டு சேர்ந்து தொழில் செய்யவும், இவருக்கக தொழில் முதலீடு செய்யவும் உலகில் பலநாடுகளும்.பணம் படைத்தவர்களும் ஆர்வம் காட்டுகின்றனர்! உலகின் புகழ் பெற்ற பல பல்கலைக்கழகங்கள் உரையாற்ற அழைப்பு விடுத்தவண்ணம் இருக்கின்றன,
எனக்கு கொஞ்சம் பொறாமையாகவே இருந்தது, பள்ளிகூடத்தில் படித்த போது என்னை விட குறைவான மதிப்பெண் எடுத்தவன்,நான் உயர் தொழில் நுட்ப படிப்பு படிக்கும் போது பேருக்கு ஒரு டிகிரி படிப்பை படித்தவன், சரியாக படிக்காததால் வேலை இல்லமல் திரிந்தவனுக்கு இவ்வளவு புகழும் பெருமையுமா என்று ஆச்சர்யமாகவும் இருந்தது!
அரங்கநாதனின் நிறுவனத்திற்கு அவன் உலகின் எல்ல நாடுகளிலும் கிளை உள்ளது,அந்தந்த நாடுகளிலேயே ஆராய்ச்சிகூடமும் வைத்திருக்கிறார்கள், இப்படிப்பட்டவன் என் நண்பன் என்பதை நினைக்கும்போது ஒரு வகையில் பெருமையாகவே இருக்கிறது!ஆனால் அவனுடனிரிந்த நட்பு முறிந்தநாட்களை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது!
இருபது வருடங்களுக்கு முன்னால் அவன் படித்து வேலையில்லாமல் ஊரில் விவசாயம் பார்த்துகொண்டிருந்த போது நான் வேலை பார்த்த நிறுவனத்தில் மேனேஜரிடம் கெஞ்சி கேட்டு ஒரு வேலை வாங்கி கொடுத்தேன்! இருபது நாட்கள்தான் வேலைபார்த்திருப்பான், பிறகு வேலை பிடிக்கவில்லை என்றி சொல்லமல் கூட ஓடிவந்துவிட்டான், இவனுக்காக பரிந்துரைத்த எனக்கும் அலுவலகத்தில் கெட்ட பெயர் ஏற்பட்டது,
ஏன்டா இப்படி செய்தாய் என்று கேட்ட போது" எனக்கு இதெல்லாம் பிடிக்கலடா, எனக்கு விவசாயம்தான் சரிபட்டு வரும்" என்றான்"
எனக்கு அதைக்கேட்டு சிரிப்பாக வந்தது! ஏற்கனவே விவசாயம் பார்த்தவுங்க எல்லம் விட்டுட்டு ஓடிட்டாங்க'நீ மட்டும் என்ன சாதிக்கவா போகிறாய்! விசாயத்தை பொறுத்தவரைக்கும் வாங்கி விக்கிறவனுக்குதான் லாபம், உற்பத்தி செய்யுறவனுக்கு நஷ்டம்தான்! இனி எல்லாம் கப்யூட்டர் உலகம்! சாப்பட்டுக்கு பதில் சக்தி தரும் கலோரி மாத்திரைதான் சாப்பிடப்போறாங்க! விவசாயம்னு சொல்லி வீணாப்போகாம பொழைகிறதுக்கு வழியை பாரு என்று சொல்லிவிட்டு வந்தேன்! அதன் பிறகு அவனை சந்திக்க வில்லை!
நீண்ட நாட்களுக்கு பிறகு அவனை நகரமாக மாறியிருந்த என் சொந்த கிராமத்துக்குசென்ற போது, அரங்கநாதன் எதிரே காரில் வந்தான், எப்படி இருக்கிறாய் என்று அழைத்தபடியே காரில் இருந்து இறங்கி வந்தான் அதே பழைய நட்புடனும் எளிமையுடனும்!
அருகில் இருந்த அவனுடைய தோட்டத்திற்கு சென்று பேசிகொண்டிருந்தோம்! தோட்டத்தில் அதி நவீனமாக விவசாயமுறைகள் மாறியிருந்ததன! வயல் வெளிகளில் கூட ஆங்காங்கே கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன! தோட்டம் முழுதும் தண்ணீர் குழாய்கள் பதிக்கப்பட்டு அவைகள் கம்ப்யூட்டரில் சாப்ட்வேரில் இணைக்கப்பட்டிருந்ததன எங்கு எப்போது தண்ணீர் பாய்ச்சவேண்டும் என்று எங்கிருந்தாலும் இண்டர்நெட்டில் தீர்மானித்து பராமரிக்கலாம்!
எப்படி உன்னால் இப்படி விவசாயத்தில் சாதிக்க முடிந்தது என அவனிடம் கேட்டபோது " நானும் முதலில்விவசாயம் தோல்விதான் இதில் ஜெயிக்க முடியாது என நினைத்தேன்! முதலில் சில விவசாய நண்பர்களுடன் சேர்ந்து உலகளாவிய நிறுவனம் இன்றை தொடங்கினோம், இதனால் உற்பத்தி பொருளை நல்லவிலைக்கு நாங்களே விறபது எளிதாக இருந்தது! மருத்துவ உலகில் நோய்கள் அதிகரித்து வருவதால் செயற்கை மருந்துகள் தவிர்த்து இயற்கை சார்ந்த விவசாயத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கிறது, விவசய நிலங்கள் உலக அளவில் குறைவாக இருப்பதால் இருக்கும் மக்கள் தொகைக்கு உற்பத்தி போதவில்லை! மக்களின் வருமானமும் அதிகரித்துவிட்டதால் விளை பொருட்களுக்கு நல்ல விலையே கிடைக்கிறது
புதுப்புது விவசாய முறைகள் ஆனால் இயற்கையோடு ஒன்றியே செய்யும்படி பின்பற்றுகிறோம்!இந்த நிறுவனத்திற்கு நான் வெறும் தலைமை மட்டும் தான்! முதாலளி இல்லை, இதில் உறுப்ப்பினராக உள்ள கோடிக்கணக்கான விவசாய உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் இதன் முதலாளிகள் நிறைய பணம் முதலீடு செய்து, விவசாய அபிவிருத்திக்கான ஆராய்ச்சிகளில் இறங்கியிருக்கிறோம்!அதன் விளைவாக பல நல்ல பலன்கள் கிடைத்துள்ளன!
நிழல் விவசாயம் என்பது இந்த ஆராய்ச்சிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி! சில அரிய வகை மூலிகைகளில் உள்கட்டமைப்புகளின் மாற்ரம் செய்வதால் ஓளிச்சேர்க்கையினால் கிடைக்கும் பசசையத்தின் தேவையினனை குறைக்கலாம், இதனால் வீட்டிற்குள் ஒளிச்சிதறல் மூலம் கிடைக்கும் வெளிச்சத்திலேயே இந்த பயிர்கள் நன்கு வளரும், சிலவகை மருந்துகளுக்கான தேவை அதிகம் இருப்பதால்! எல்லோரும் இதை ஒரு வருமான வாய்ப்பாக செய்கிறார்கள்! அதிகரித்து வரும் புவி வெப்பமும் குறைந்து வீட்டிற்குள் வெப்பம் குறைகிறது! வீடுகளில் ஜன்னல், மற்றும் மாடிகளில் கூட இதை வளர்க்கிறார்கள்! என்றான்
இயந்திர மயமாகிப்போன இந்த உலகத்தில் கலோரி மாத்திரைகள் எல்லாம் வந்துவிட்டன, எதிர்காலத்தில் இன்னும் நிரைய கண்டிபிடிப்புகள் வரலாம் அப்பொதும் விவசாயம் வெற்றி பெறுமா என்றேன்! சிரித்துகொண்டே நிச்சயமாக என்றான்!
உலகம் எவ்வளவுதான் மாறினாலும் கடைசி மனிதன் இருக்கும் வரை விவசாயத்திற்கு தேவையும் மதிப்பும் இருக்கும் ஏனென்றால், மனிதன் எப்போதும் உணர்ச்சிகளுக்கு உட்பட்டவன்! சாப்பாடு என்பது சுவை என்ற உணர்ச்சியோடு தொடர்புடையது அதனால் அதைவிட்டு விலகிநிற்க முடியாது!இனி வரும் காலங்களில் விவசாயம் எப்போதும் ஜெயிக்கும் என்று நம்பியதால்தான் அது நடந்திருக்கிறது, இன்னும் நம்புவேன் நடக்கும் என்றான்!
(நம்பிக்கைபாண்டியன்)
1 comment:
அலுவலகப்பணிகள் எல்லாம் வீட்டிலிருந்தபடியே நடந்தன, குழந்தைகள் தேர்வுக்கு மட்டும் பள்ளிக்குப் போயின, 1 மாத்திரை சாப்பிட்டால் பத்து நாளைக்குப் பசிக்காது மொபைல் கோவில்கள் நல்ல கற்பனை
வாழ்த்துகள்
Post a Comment