Sunday, October 23, 2011

கவிதைகளாகவும் இருக்கலாம்! - படக்கவிதை

1

காற்றின் கோபத்தை
தாங்கமுடியாத மரம்
தற்கொலையால் வீழ்ந்து கிடக்கிறது!

2

திடீரென்று தோன்றி
சில நிமிடங்களில் முழுமையடைந்து
வெளியேறும் கவிதைகளை!

பல மாதங்களாகியும்
முற்றுப்பெறாமல்
காத்திருக்கும் கவிதைகள்
பொறாமையுடன் பார்த்துக்கொண்டிருந்தன!

3

காத்திருக்கும்
நேரங்களில் கிடைக்காமல்
எதிர்பாராத தருணங்களில்
தொடர்ந்து வந்துகொண்டிருக்கும்
அரசுப் பேருந்துகளாகவே
என் கவிதைகள்!







5 comments:

மாலதி said...

மாறுபட்ட கோணத்தினாலான சிறந்த ஆக்கம் உண்மையில் எல்லாமே இயல்பபாக இந்த ஆக்கம் வந்திருக்கிறது பாராட்டுகள் நன்றிகள்

சம்பத்குமார் said...

மிக இயல்பான வரிகள் நண்பரே..அனைத்தும் மனதில் ஒட்டிக்கொள்கின்றன

தொடரட்டும்..

நட்புடன்
சம்பத்குமார்

ஹேமா said...

மனதின் சிந்தனைகள் இயல்பாக அற்புதமாக இருக்கிறது பாண்டியன் !

Thooral said...

அருமையான கவிதைகள் ..
தொடர்ந்து தங்கள் கவிதை பூ மலர வாழ்த்துக்கள்...

நம்பிக்கைபாண்டியன் said...

வருகை தந்த நட்புள்ளங்களுக்கு நன்றி