Wednesday, June 06, 2007


சுதந்திரத்தை உணர்வோம்

நினைத்ததும்
கிடைத்துவிடவில்லை
சுதந்திரம்!
எத்தனை பேரின்
காயங்கள்!
எவ்வளவு பேரின்
கண்ணீர்கள்!

அளவில்லாத கொடுமைகள்!
அர்த்தமிள்ளாத
அடக்கு முறைகள்!
அத்தனையும் மாற!
அன்று!
சுயநலம் எதுவுமின்றி
பலர் ரத்தம் சிந்தியதால்தான்
இன்று
அடிமைபயம் சிறிதுமின்றி!
சுதந்திரமாய் வாழ்கிறோம்!

இன்று நாம்!
சுதந்திர காற்றை சுவாசிக்க!
அன்று அவர்கள்
சுவாசத்தை இழந்து
தன் உயிருக்கும்! நமக்கும்
சுதந்திரம் அளித்தார்கள்!

நம்மை
அடிமைப்படுத்தியவர்களின்!
ஆங்கிலப் புத்தாண்டையும்!
காயப்படுத்தியவர்களின்
காதலர் தினத்தையும்!
கொண்டாடுவதில் இருக்கும்
ஆர்வத்தில் பாதி கூட!
சுதந்திர தினத்திற்க்கு இருப்பதில்லை!

ஒருபுறம்
வளர்ச்சிப்பாதையில்!
மறுபுறம் அழிவுப்பாதையில்!
இலக்கில்லாத பாதையில்
பலரது வாழ்க்கைப் பயணம்!
இதற்காகவா பெற்றோம் சுதந்திரம்!

தீமைகளின்
சுதந்திரத்தைஅழித்துவிட்டு!
இனி நன்மைகளுக்கு
அடிமையாவோம்!
சுதந்திரத்தின்
அருமை உணர்வோம்!
~நம்பிக்கை பாண்டியன்

1 comment:

malaiyaman said...

nandru pandian