Sunday, December 30, 2007

முரண்பாடு
அன்றொரு நாள்
வெளியே
காத்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்காத‌

பேருந்தை பார்த்து
சபித்துச் சொன்ன மனசு!

மற்றொரு நாள்
உள்ளே
அமர்ந்திருப்பவனாய்,
நிறுத்தத்தில் நிற்கும்

பேருத்தை நினைத்து
"இத்தனை நிறுத்தங்களா"
என சலித்துக் கொள்கிறது!


~நம்பிக்கைபாண்டியன்

No comments: