Thursday, February 09, 2012

மனைவியானவள்! - கவிதைகள்


தாமதமாகத் தொடங்கி
நீடித்துப் பெய்யும்
மரத்தடி மழையாகவே
உன் காதல்!


**************************

அவசியங்கள் எதுவுமற்று
அன்பால் எழுதப்பட்டதால்
நிபந்தனைகளின்றி நீடிக்கிறது
நம் இருவருக்கும் 
பொதுவிலான
கற்பெனும் நற்குணம்!


**********************************

*வலிமையான முத்தம்*


மகிழ்ச்சி
நிறைந்த நேரங்களில்,
ஆசையாக‌
உதடுகளில்
கொடுத்ததை விட! 

கவலை
மிகுந்த தருணங்களில்
ஆறுதலாக‌
நெற்றியில் கொடுத்தது
அதிகம் இனிக்குதடி!


******************************







5 comments:

Marc said...

அழகான வருடும் கவிதைகள் அருமை வாழ்த்துகள்

ஹேமா said...

இன்று காதல் நாளோ உங்களுக்கு !

இராஜராஜேஸ்வரி said...

அழகான எண்ணப் பகிர்வுகள்... பாராட்டுக்கள்..

Unknown said...

தாமதமாகத் தொடங்கி
நீடித்துப் பெய்யும்
மரத்தடி மழையாகவே
உன் காதல்!

கலக்கிருக்கீங்க.. நண்பரே..

நம்பிக்கைபாண்டியன் said...

வருகைக்கு நன்றி,
தனசேகர்,
ஹேமா,
ராஜேஸ்வரி,
யோவ்

தங்களின் வருகைக்கு நன்றி,

((இன்று காதல் நாளோ உங்களுக்கு !)))

வர இருக்கும் காதலர் தினத்திற்காக எழுதியது