எறும்பு எலி,
பாம்பு பூரான்
தெருநாய், என
தன் அனுமதியின்றி
வீட்டிற்குள் நுழையும்
எந்த ஒரு உயிரையும்
அடித்து விரட்டியோ, கொன்றோ
வெளியேற்றுகிறான் மனிதன்!
காடுகளை அழித்து
வயல்களை நகராக்கி
குடியேறும் மனிதர்களை
என்ன செய்வதென்று தெரியாமல்
விழித்துக்கொண்டிருக்கின்றன
விலங்குகளும் பறவைகளும் !
9 comments:
Nice
அருமைக்கவிதை வாழ்த்துகள்
விலங்கினங்களை கூட திருத்திவிடலாம்...
மனிதர்களை முடியாது நண்பரே....
இந்த உலம் அழியும் வரை மனிதர்கள் இதைதான் செய்துகொண்டிருப்பார்கள்..
ஆறறிவுகளின் அடாவடித்தனங்கள் பற்றிய யதார்தத்தை குறுங்கவிதையொன்றில் வைத்த அழகு சிறப்பு.
யோசிச்சிடே இருக்கவேண்டியதுதான்.நாகரீகம்,விஞ்ஞானம்ன்னு சொல்லிட்டு அழிஞ்சிட்டே இருக்கோம் !
Unknown
DhanaSekaran .S
சௌந்தர்
தீபிகா
ஹேமா!
இயற்கையை நேசிக்கும் தங்களின் கருத்துக்களுக்கு நன்றிகள்!
நல்ல கருத்தினை வலியுறுத்திக் கூறியுள்ளீர்கள்.
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இதே கருத்தினை வலியிறுத்தி நான் சமீபத்தில் ஓர் படப்பதிவு வெளியிட்டுள்ளேன்.
இணைப்பு:
http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_29.html
02.03.2012 வலைச்சரத்தில் கூட அறிமுகமாகியுள்ளது.
மாறுபட்ட அருமையான சிந்தனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
கருத்துக்களுக்கு நன்றி,கோபாலகிருஷ்ணன் & ரமணி சார்ஸ்
Post a Comment