Wednesday, May 07, 2008

(கவிதைகள்)

1.மனம்

மதிப்பிற்குரியவர்களாக
இருந்தாலும் கூட!
3.மனதிற்குள்
திட்டிவிடுகிறேன்
மறுக்கப்படும்
நியாயங்களுக்காக!



2.மழை

மாமியார் மருமகள்
சண்டையைப் போல,
நிறுத்தவும் முடியாமல்
ஓங்கியும் பெய்யாமல்
சாரலாய்
முணுமுணுத்துக்
கொண்டே இருக்கிறது
இந்த அடைமழை!


அன்பு

கம்யூட்டரில் கல்வி
கம்யூட்டரில் கடிதம்
கம்யூட்டரில் நிர்வாகம்
கம்யூட்டரில் சினிமா
கம்யூட்டரில் காதல்
கம்யூட்டரில் ஜாதகம்
கம்ப்யூட்டரில் வியாபாரம்
கம்ப்யூட்டரில் ஷாப்பிங்! என‌
தேவைகளும் சேவைகளும்
வளர்ந்துகொண்டே வந்தாலும்,

எந்தக் கம்ப்யூட்டரிலும்
வாங்குவதற்கு வாய்ப்பில்லை!
அம்மாவின் அன்பை!

~நம்பிக்கைபாண்டியன்

No comments: