Thursday, May 08, 2008

நட்பு!

ஐநூறுக்கும்
ஆயிரத்திற்கும்
அன்பளிப்பு
வாங்கி வந்திருந்த‌
நண்பர்களுக்கு மத்தியில்!

நூறு ரூபாய்
மொய்யுடன் சென்ற‌
எனக்குள் எழுந்த‌
தற்காலிக
தாழ்வு மனப்பான்மையை!

மணமகன் கோலத்தில்
மேடையிலிருந்தபடி
உற்சாகமாய் கையசைத்து
புகைப்படம் எடுக்க
அழைத்த‌ நண்பனின்
உரிமையான‌ நட்பு
உடைத்து எறிந்தது!

~நம்பிக்கைபாண்டிய‌ன்

No comments: