Wednesday, February 01, 2012

தாய்மொழி - கவிதை

நேற்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"SORRY" என்றவனிடம்
சண்டையிட்டு வந்த நான்!

இன்றைய பயணத்தின்
கூட்ட நெரிசலில்
காலை மிதித்துவிட்டு
"மன்னிச்சுடுங்க " என்றவனிடம்
புன்னகைத்தபடி வருகிறேன்!
வார்த்தைளின்  வலிமை
மொழியில் இருக்கிறது‍...!

4 comments:

பாலா said...

எதார்த்தம். மன்னிச்சுடுங்க என்று கேட்கும்போது இயல்பாகவே அதில் பணிவு இருப்பது போல தோன்றுகிறது. அருமையான கவிதை.

சசிகலா said...

தமிழுக்கே உரிய தங்கமான குணம் அருமைங்க

நம்பிக்கைபாண்டியன் said...

கருத்துக்களுக்கு நன்றி, பாலா, சசிகலா.

tharu said...

arumai. miga arumai