நீ
சாலையோரத்தில்
ஒதுங்கி நிற்கும்போது
அடர்த்தியாக
பெய்துகொண்டிருந்த மழை
நடக்க ஆரம்பித்ததும்
மாறிவிடுகிறது
சிறு தூரலாக...
**************************
உன் ஊரின்
பெயர் தாங்கி
என்னைக்
கடந்து செல்லும்
ஒவ்வொரு
பேருந்தின் பின்னாலும்
ஓடிக்கொண்டிருக்கிறது
என் மனது!
**************************
நான் எழுதும்
ஒவ்வொரு
கவிதைக்கும்
ஒரு முத்தம் என்கிறாய்
என் டைரி
நிரம்பி வழிகிறது!
**************************
12 comments:
மிக அருமையான கவிதை பதிவு வாழ்த்துகள்
மூன்றும் அருமை... அதிலும் இரண்டாவது... சூப்பர்...
அழகான கவிதை என்றாலும் ஆழமாக பதிய மறுக்கிறது மூன்றாவது கவிதை தவிர நன்றி நண்பரே
அழகு...
மூன்று கவிதைகளும் அழகே!
இரண்டாவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஏனென்றால் அது நினைவுகளில் அடிக்கடி வந்து போன அனுபவம் எனக்கு உண்டு. ;)
மூன்று கவிதைகளும் மிக மிக அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
சேகர்
அன்புமணி
சத்யபிரபு
செளந்தர்
கோபாலகிருஷ்ணன்
ரமணி
உங்கள் அனைவரின் பாராட்டுக்களுக்கும் நன்றிகள்!
/////தமிழ்விடுதி சத்யபிரபு said...
அழகான கவிதை என்றாலும் ஆழமாக பதிய மறுக்கிறது மூன்றாவது கவிதை தவிர நன்றி நண்பரே////
எல்லா கவிதைகளும் மனதை தொடுமாறு எழுதுமளவுக்கு நான் பெரிய ஆள் இல்லை நண்பா,
என்னை பொறுத்தவரை இன்று நான் கவிதை எழுதுவதே ஒரு பெரிய விசயம்(5 ஆண்டுகளுக்கு முன்னால் எனக்கு கவிதையை பற்றி எதுவுமே தெரியாது)
மூன்றுமே அருமை.:)
நான் எழுதும்
ஒவ்வொரு
கவிதைக்கும்
ஒரு முத்தம் என்கிறாய்
என் டைரி
நிரம்பி வழிகிறது!
>>>
எல்லா இடத்துலயும் லஞ்சம் குடுத்தாதான் காரியம் ஆகும்ன்னு சொல்றது சரிதான் போல
அருமையான கவிதை பதிவு
முத்துக்களால் கோர்க்கப்பட்ட
அழகிய முத்து மாலையாய்
அருமையான கவிதைச் சரம் நண்பரே..
என் டைரி
நிரம்பி வழிகிறது!
கூடவே காதலும்!!!!
Post a Comment